ஆப்நகரம்

"இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு" படப்பிடிப்பு ஆரம்பம்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தை அடுத்து இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகவுள்ள இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

Samayam Tamil 4 Jan 2019, 3:16 pm
நடிகர் கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். அதையடுத்து நடிகர் தினேஷை வைத்து ‘அட்டகத்தி’ மற்றும் நடிகர் ரஜினியை வைத்து ‘காலா’, ‘கபாலி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா.ரஞ்சித். இவர் இயக்கிய எல்லா படங்களும் வெற்றிப் பெற்றன.
Samayam Tamil gundu


இந்நிலையில் இவர் இயக்குனர் தொழிலுடன் படங்களையும் தயாரித்தும் வருகிறார். இவர் தன்னுடைய நீலம் புரடெக்ஷன்ஸ் கம்பெனி சார்பில் படங்களை தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில் முதன் முறையாக வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இரண்டாவதாக நடிகர் தினேஷ் நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்று பெயரிட்டுள்ளார். இந்தப் படத்தை ஆதியன் ஆதிரை என்பவர் இயக்கி வருகிறார்.

‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு நீலம் புரடெக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் தயாரிக்கும் இரண்டாவது படம் இது. எனவே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படமும் சமூக அரசியல் சார்ந்த கதை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்