ஹீரோ உட்பட மூன்று பேர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆக்சிஜன்’.
இயக்குனர் ஆனந்த்கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆக்சிஜன்’. இதற்கு முன் இவர் ‘மெட்ரோ’ படத்தை இயக்கியுள்ளார். கிரைம் திரில்லரான இந்தப் படத்தில், சிரிஷ் ஹீரோவாக நடித்திருந்தார். செயின் பறிப்பு சம்பவங்கள் எப்படியெல்லாம் நடக்கின்றன என்பதை தெளிவாக சொல்லி, எல்லோரையும் எச்சரிக்கைப்படுத்திய படம் இது.
இரண்டாவதாக தற்போது ‘ஆக்சிஜன்’ படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘ஆக்சிஜன்’ எனத் தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படம் கிரைம் சார்ந்த படம். நேர்மையாக வாழ்பவர்கள்தான் இந்த உலகத்தின் ‘ஆக்சிஜன்’ என்ற கருத்தை வலியுறுத்தி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தில் அசோக் செல்வனைத் தவிர, இன்னும் இரண்டு பேர் மட்டுமே நடிக்கின்றனர். ஒருவர் யோகிபாபு, இன்னொருவர் யார் என்பதைத் தேடி வருகிறார் ஆனந்த் கிருஷ்ணன்.
இயக்குனர் ஆனந்த்கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆக்சிஜன்’. இதற்கு முன் இவர் ‘மெட்ரோ’ படத்தை இயக்கியுள்ளார். கிரைம் திரில்லரான இந்தப் படத்தில், சிரிஷ் ஹீரோவாக நடித்திருந்தார். செயின் பறிப்பு சம்பவங்கள் எப்படியெல்லாம் நடக்கின்றன என்பதை தெளிவாக சொல்லி, எல்லோரையும் எச்சரிக்கைப்படுத்திய படம் இது.
இரண்டாவதாக தற்போது ‘ஆக்சிஜன்’ படத்தை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘ஆக்சிஜன்’ எனத் தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படம் கிரைம் சார்ந்த படம். நேர்மையாக வாழ்பவர்கள்தான் இந்த உலகத்தின் ‘ஆக்சிஜன்’ என்ற கருத்தை வலியுறுத்தி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. இந்தப் படத்தில் அசோக் செல்வனைத் தவிர, இன்னும் இரண்டு பேர் மட்டுமே நடிக்கின்றனர். ஒருவர் யோகிபாபு, இன்னொருவர் யார் என்பதைத் தேடி வருகிறார் ஆனந்த் கிருஷ்ணன்.