ஆப்நகரம்

வடசென்னையின் 30 நாள் படப்பிடிப்பு நிறைவு

இயக்குனர் வெற்றிமாறனின் கனவுப் படமான 'வடசென்னை' படத்தின் முதல் 30 நாள் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

TNN 4 Sep 2016, 1:07 pm
இயக்குனர் வெற்றிமாறனின் கனவுப் படமான 'வடசென்னை' படத்தின் முதல் 30 நாள் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
Samayam Tamil 30 days up for vada chennai
வடசென்னையின் 30 நாள் படப்பிடிப்பு நிறைவு


மூன்று பாகங்களாக உருவாகவிருக்கும் கேங்க்ஸ்டர் படமான வடசென்னை படத்துக்காக சென்னையில் பிரம்மாண்டமான சிறை செட் அமைத்து படப்பிடிப்புகள் நடைபெற்றன. இதில் படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டதாக படகுளுவுக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கின்றன.

சின்ன ரவுடியாக சுற்றி பின்னர் ஒரு அரசியல்வாதியாக உருவெடுக்கும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். மேலும், இந்த படத்துக்காக தனது குரல், நடை, உடை பாவனை என அனைத்தையும் மாற்றிக் கொண்டு தனுஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் தனுஷின் திரையுலக வாழ்வில் மிகவும் சவாலான கதாப்பாத்திரமாகும் என படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக முதலில் நடிகை சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் விலகிக் கொண்டதும் தனுஷுக்கு ஜோடியாக நடிகை அமலாபால் குப்பத்து பெண்ணாக நடிப்பார் என கூறப்பட்டாலும் படக்குழு தரப்பில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்