ஆப்நகரம்

இந்த காலத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த நான்கு ஹீரோயின்கள்!

இந்த காலத்தில் நான்கு ஹீரோயின்கள் ஒரு படத்தில் நடிக்க சம்பளமே வாங்காமல் நடித்துள்ளனர்.

Samayam Tamil 13 Jul 2018, 4:26 pm
இந்த காலத்தில் நான்கு ஹீரோயின்கள் ஒரு படத்தில் நடிக்க சம்பளமே வாங்காமல் நடித்துள்ளனர்.
Samayam Tamil santhoshathil-kalavaram-motion-poster


‘சந்தோஷத்தில் கலவரம்’ இந்தப் படத்தை கிராந்தி பிரசாத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடித்த அனைவருமே புதுமுகங்கள்தான். படத்தில் ருத்ரா அவ்ரா, ஆர்யன், ஜெய் ஜெகநாத், ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் பற்றி இயக்குனர் கிராந்தி பிரசாத் கூறுகையில், ‘‘நண்பர்கள் சிலர் ஒரு இடத்துக்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார்கள். அந்த பிரச்னையில் இருந்து விடுபட, தங்களுக்குள் இருக்கும் சக்தியை பயன்படுத்தி எப்படி ஜெயிக்கிறார்கள் என்பது படத்தின் கதை.
இந்தப் படத்தில் நான்கு ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இவர்கள் யாருமே சம்பளம் வாங்கவில்லை. நாங்கள் கொடுத்தோம் அவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். காரணம், தங்கள் திறமையை நிரூபிப்பதற்காகவே இந்தப் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தோம் என்று கூறினார்கள். இவர்களைப் போலவே மற்ற நடிகர்களும் தங்களது திறமையை நிரூபிக்க சம்பளம் சம்பளம் வாங்கவில்லை’’ என்றார் இயக்குனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்