ஆப்நகரம்

50 ஆண்டுகளுக்குப் பின் ஐ.நா.,வில் எதிரொலிக்கும் கர்நாடக இசை

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக பாடகியின் குரல் ஒலிக்கவிருக்கிறது.

TNN 31 Aug 2016, 9:44 am
சென்னை: நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக பாடகியின் குரல் ஒலிக்கவிருக்கிறது.
Samayam Tamil 50 years on carnatic music to reverberate in the un again
50 ஆண்டுகளுக்குப் பின் ஐ.நா.,வில் எதிரொலிக்கும் கர்நாடக இசை


வருகிற அக்டோபர் 2ஆம் தேதி சர்வதேச அகிம்சை தினத்தை முன்னிட்டு கலை நுணுக்க திறன் கொண்ட எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் கர்நாடக பாடகி சுதா ரகுநாதன் கச்சேரி நடத்தவுள்ளார். கடந்த 1966ஆம் ஆண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா சபையில் கச்சேரி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சங்கரன் நேத்ராலயா கண் மருத்துவமனியில் ஏழை எளியோர் சிகிச்சைக்காக அமெரிக்காவின் 6 முக்கிய நகரங்களில் இசை கச்சேரி நடத்தப்படவுள்ளது. அதன் உச்சகட்டமாக ஐ.நா சபையிலும் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி சுமார் 3,000 பேருக்கு கண்புரை சிகிச்சை மேற்கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைக்காக பயனபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுதா ரகுநாதன் கூறுகையில்,'எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவுக்கு மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்த நான் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் உணர்சிகரமாக உள்ளது. இது அவரை கவுரவிக்க எனக்கு கிடைத்த வாய்ப்பு என கூறியுள்ளார். கர்நாடக சங்கீதத்தில் மிகவும் பிரபலமான பாடல்களை மெட்லியாக பாடவுள்ளார். இது அகிம்சையை, சமாதானத்தை கொண்டாடும் வகையில் அமையும் என பத்ம பூஷன் சுதா ரகுநாதன் கூறியுள்ளார்.

கடந்த 1980-களில், சங்கரன் நேத்ராலயாவுடன் இணைந்து எம்.எஸ்.சுப்புலட்சுமி நிறைய இசை கச்சேரிகளை நடத்தி, அதன் மூலம் நிதி திரட்டியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்