ஆப்நகரம்

ஜெயலலிதா நினைவிடத்தில் 5000 ரஜினி ரசிகர்கள் அஞ்சலி..!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 5000 ரஜினி ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

TNN 17 Dec 2016, 5:16 pm
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 5000 ரஜினி ரசிகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
Samayam Tamil 5000 rajini fans pays homage to jayalalitha
ஜெயலலிதா நினைவிடத்தில் 5000 ரஜினி ரசிகர்கள் அஞ்சலி..!


தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜெயலலிதாவின் மறைவையொட்டி அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,பழைய கோபங்களை மறந்துவிட்டு தனது மகளின் திருமணத்திற்கு ஜெயலலிதா வந்ததாகவும்,அவர் ஒரு மகாத்மா எனவும் உருக்கத்துடன் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே கூடிய 5000-க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள்,மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு நடந்து சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவர்கள் தங்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.

ஜெயலலிதா குறித்த ரஜினியின் பேச்சு மிகவும் உருக்கமாக இருந்ததாகவும்,எனவே அவரை பின் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதாகவும் ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர்.மேலும் ஜெயலலிதாவின் பாதையை பின்பற்றி ரஜினிகாந்தும் அரசியலுக்கு வர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5000 Rajini Fans pays homage to Jayalalitha

அடுத்த செய்தி

டிரெண்டிங்