ஆப்நகரம்

என்னால் மலையாள சினிமாவுக்கு 50 கோடி இழப்பு: திலீப்!

மலையாள சினிமாவில் தற்போது நான் இல்லாததால் 50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகர் திலீப் கூறியுள்ளார்.

TNN 11 Aug 2017, 5:03 pm
மலையாள சினிமாவில் தற்போது நான் இல்லாததால் 50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகர் திலீப் கூறியுள்ளார்.
Samayam Tamil 50cr loss for me says dilip
என்னால் மலையாள சினிமாவுக்கு 50 கோடி இழப்பு: திலீப்!


பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே திலீப் தாக்கல் செய்த இரண்டு ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

தற்போது அவர் மூன்றாவது முறையாக கேரள உயர்நீதி மன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு எதிராக மலையாள சினிமாவில் சதி திட்டம் தீட்டியுள்ளனர். நான் சிறையில் இருப்பதால் நான் நடித்த ‘ராம்லீலா’ உள்பட பல படங்கள் வெளிவராமல் இருக்கிறது.

பல படங்கள் பாதியில் நிற்கிறது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சக நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை நான் இல்லாததால் மலையாள சினிமாவுக்கு 50 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று திலீப் மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவுக்கு 3 வாரத்திற்குள் பதில் அளிக்க எர்ணாகுளம் போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்