ஆப்நகரம்

80 வயசு பாட்டி: இப்படி நடக்கும்னு பிரேம்ஜி நெனச்சிருக்கவே மாட்டார்

பிரேம்ஜிக்கு இப்படி ஒரு வில்லி வருவார் என்று யாருமே நினைக்கவில்லை.

Samayam Tamil 20 Dec 2019, 5:01 pm
ஒரு கிடாயின் கருணை மணு படம் மூலம் பிரபலமான இயக்குநர் சுரேஷ் சங்கையா அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். அந்த படத்தில் பிரேம்ஜி அமரன் தான் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil premgi amaren


கிராமத்து பின்னணி கொண்ட கதையில் பிரேம்ஜி நடிக்கிறார். படம் குறித்து தயாரிப்பாளர் சமீர் பரத் ராம் கூறியதாவது,

அப்பாவியாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் காமெடியும் செய்யும் ஆள் தேவைப்பட்டது. இந்த கதாபாத்திரத்திற்கு பிரேம்ஜி அமரன் தான் சரியாக இருப்பார் என்று முடிவு செய்தோம். பிரம்ஜி தற்செய்லாக ஒரு பிரச்சனையில் சிக்க, அடுத்து என்ன நடக்கிறது என்பது தான் கதை என்றார்.

பிரேம்ஜி ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. அந்த படத்தில் அவருக்கு வில்லன் இல்லை வில்லி. பிரேம்ஜியின் வில்லியாக நடிக்கும் மாயக்காவுக்கு 80 வயது. பல பேரை ஆடிஷன் செய்து மாயக்காவை தேர்வு செய்துள்ளார்களாம்.

அஜித்துக்கு வில்லனாகும் 'ஹீரோ'?

மாயக்காவுக்கு வெயிட்டான கதாபாத்திரமாம். வெப் தொடரில் நடித்த ஸ்வயம் சித்தா பிரேம்ஜிக்கு ஜோடியாக நடிக்கிறார். பிக் பாஸ் 3 பிரபலம் ரேஷ்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

படப்பிடிப்பு நாளை அருப்புக்கோட்டையில் துவங்குகிறது. படத்தை 30 நாட்கள் பிரேக் இன்றி ஷூட் செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்திற்கு அந்தோணி தாசன் இசையமைக்கிறார்.

சிவகார்த்திகேயன் சாதா ஹீரோவா, சூப்பர் ஹீரோவா?: விமர்சனம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்