ஆப்நகரம்

முரளிதரனை ஏன் கோச்சாக வச்சிருக்கீங்கனு சன் ரைசர்ஸை கேட்கிறது தானே?: ராதிகா

தமிழருக்கு சொந்தமான சன் ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் ஏன் உள்ளார் என்று கேட்க வேண்டியது தானே என ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Oct 2020, 4:26 pm
800 படத்தில் இலங்கையை சேர்ந்த முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழினத் துரோகியான முத்தையா முரளிதரனாக தமிழர்கள் கொண்டாடும் விஜய் சேதுபதி நடிக்கவே கூடாது என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Samayam Tamil radhika sarathkumar


தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் நடிக்கவும். நீங்கள் பார்க்க முத்தையா முரளிதரன் போன்று அல்ல மாறாக பிரபாகரன் போன்று இருக்கிறீர்கள் என்று கவிஞர் தாமரை தெரிவித்தார்.

இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு தாயாக நடித்த ராதிகா சரத்குமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்பவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?? அரசியல் பின்னணி கொண்ட தமிழருக்கு சொந்தமான சன் ரைசர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக முத்தையா முரளிதரன் ஏன் இருக்கிறார் என்று கேட்க வேண்டியது தானே?. விஜய் சேதுபதி ஒரு நடிகர். ஒரு நடிகரை கட்டுப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

ராதிகா சரத்குமாரின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,

ராதிமா, ரொம்ப சரியான சொன்னீர்கள். சன் ரைசர்ஸ் அணிக்கு சொந்தக்காரர் கண்டிப்பாக முத்தையா முரளிதரனை நீக்க மாட்டார். அவரிடம் கேள்வி கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை. நீங்கள் கேட்டுவிட்டீர்கள். இந்தியாவில் நடக்கும் ப்ரீமியர் லீக்கில் மட்டும் முத்தையா முரளிதரன் கலந்து கொள்வதில் யாருக்கும் பிரச்சனை இல்லை. ஆனால் அவரை பற்றி படம் எடுத்தால் மட்டும் ஆளாளுக்கு பேசுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடித்தால் அந்த படத்தை வெளியிட விட மாட்டோம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 800 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதில் இருந்து பலரும் விஜய் சேதுபதியை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை பார்த்த 800 பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது,

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் 800 திரைப்படம் பல்வேறு வகையில் அரசியல் ஆக்கப்பட்டு வருவதை அறிகிறோம். 800 திரைப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படமே தவிர இதில் எந்த வித அரசியலும் கிடையாது. தமிழகத்தில் இருந்து தேயிலைத் தோட்டக் கூலியாளர்களாக இலங்கைக்கு குடிபெயர்ந்த ஒரு சமூகத்தில் இருந்து வந்த முரளிதரன் எப்படி பல தடைகளைத் தாண்டி உலக அளவில் சிறந்த பந்துவீச்சாளராக உயர்ந்தார் என்பது தான் இத்திரைப்படத்தின் கதையம்சம்.

இத்திரைப்படம் இளைய சமுதாயத்துக்கும் வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் தடைகளைக் கடந்து சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தும் படமாக இருக்கும். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளராக ஒன்றை மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும். இத்திரைப்படத்தில் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் விதத்திலான காட்சியமைப்புகள் கிடையாது.

கூடுதலாக இத்திரைப்படத்தில் இலங்கையை சேர்ந்த பல தமிழ் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்குபெற இருக்கின்றனர். அதன் மூலம் இலங்கை தமிழ் திரைத்துறை கலைஞர்களுக்கு தங்கள் திறமையை உலக அரங்கில் வெளிக் காட்ட இந்த படம் நிச்சயமாக ஒரு அடித்தளமிட்டுத் தரும் என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம். கலைக்கும், கலைஞர்களுக்கும் எல்லைகள் கிடையாது. எல்லைகள் கடந்து மக்களையும், மனிதத்தையும் இணைப்பது தான் கலை. நாங்கள் அன்பையும், நம்பிக்கையும் மட்டுமே விதைக்க விரும்புகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

முரளிதரனாக நடிக்க கேட்டாங்க, நான் முடியாதுன்னுட்டேன்: அசுரன் நடிகர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்