ஆப்நகரம்

மெர்சல் பேனர் கட்ட முயன்றபோது சுவர் இடிந்து சிறுவன் பலி!

காஞ்சிபுரத்தில் மெர்சல் படத்திற்கான பேனரை கட்டமுயன்றபோது சுவர் இடிந்து லோகேஸ்வரன் என்ற 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரழந்தார்.

TNN 18 Oct 2017, 4:50 am
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மெர்சல் படத்திற்கான பேனரை கட்டமுயன்றபோது சுவர் இடிந்து லோகேஸ்வரன் என்ற 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரழந்தார்.
Samayam Tamil a 14 year old vijay fan died while trying to tie the mersal banner in theatre
மெர்சல் பேனர் கட்ட முயன்றபோது சுவர் இடிந்து சிறுவன் பலி!


ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெர்சல் படம் உலகமெங்கும் இன்று வெளியாகிறது. இதற்காக விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் பேனர்களைக் கட்டி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காஞ்சிபுரத்தில் உள்ள வாலாஜாபாத்தில் இருக்கும் தியேட்டர் ஒன்றில் விஜய் ரசிகர்கள் 4 பேர் தியேட்டரில் பேனர் கட்ட முயன்றுள்ளனர். அப்போது, சுவர் ஈரப்பதமாக இருந்ததால் திடீரென இடிந்தது.

சுவர் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி லோகேஸ்வரன் என்ற 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

A 14 year old Vijay fan died, while trying to tie the Mersal banner in Theatre.

அடுத்த செய்தி

டிரெண்டிங்