ஆப்நகரம்

விவசாயிகளின் பிரச்னைகளை பேசும் “தெரு நாய்கள்”!

விவசாயிகளின் பிரச்னைகளை பேசும் “தெரு நாய்கள்”!

TNN 25 Apr 2017, 9:35 am
தற்போது கோலிவுட்டில் இன்றைய சமூக பிரச்னைகளை மையப்படுத்தி திரைப்படம் எடுப்பதில் அதிகம் கவனம் செலுத்திவருகின்றனர். அதில் தற்போதைய முக்கிய பிரச்னையாக பார்க்கப்படும் விவசாயிகள் வாழ்க்கையை பற்றி சொல்லும் திரைப்படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் ஹரி உத்ரா தனது முதல் படத்தில் விவசாயிகள் பிரச்னையை கையில் எடுக்கிறார். தெரு நாய்கள் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தில் விவசாயிகளின் பிரச்னைகளையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்படி விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழிக்கின்றன என்றும் பேசப்பட்டுள்ளது.
Samayam Tamil a film to support farmers livelihood
விவசாயிகளின் பிரச்னைகளை பேசும் “தெரு நாய்கள்”!


இது குறித்து இயக்குநர் ஹரி பேசும் போது, காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெரு நிறுவனங்களால் எப்படி பாதிக்கப்படுகின்றனர், அதற்கு பின்னால் அரசியல்வாதிகள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்று சொல்லியிருக்கிறோம் என்றார். கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி பகுதிகளில் படத்தின் பெரும் பகுதிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோலி சோடாவில் வில்லனாக நடித்த மதுசூதன் ராவ் இதில் வில்லனாக நடித்துள்ளார். படத்தின் ஷூட்டிங் முடிவுற்ற நிலையில் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

படத்தில் ஹீரோ என்று யாரும் இ்ல்லை. பிரதீப், அப்புகுட்டி, ராம்ஸ், இமான் அண்ணாச்சி மற்றும் பாவெல் இவர்கள் ஐந்து பேரை சுற்றியே கதை நகர்கிறது. மைம் கோபி, நாயுடு, சுஷீல், தீனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்