ஆப்நகரம்

மகேந்திரனின் மாற்று சினிமா ‘முள்ளும் மலரும்’ - ஓர் பார்வை

திரைப்படங்கள் என்பது நடிகர்களைக் கொண்டாடும் களம் அல்ல, அது இயக்குநர்களுக்கான களம் என நினைத்து யதார்த்த படங்கள் இயக்கிய இந்திய சினிமாவின் மூத்த யதார்த்த சினிமா இயக்குநர் மகேந்திரன்.

Samayam Tamil 2 Apr 2019, 8:02 am
திரைப்படங்கள் என்பது நடிகர்களைக் கொண்டாடும் களம் அல்ல, அது இயக்குநர்களுக்கான களம் என நினைத்து யதார்த்த படங்கள் இயக்கிய இந்திய சினிமாவின் மூத்த யதார்த்த சினிமா இயக்குநர் மகேந்திரன்.
Samayam Tamil hqdefault


கமர்ஷியல் கட்டுப்பாடுகளை உடைத்து, தனக்கென ஓர் தனி பாணியில் பயணித்தவர். இயக்குநர் மணி ரத்னத்தின் ரோல் மாடல். இன்னும் பல மாற்று சினிமா விரும்பும் இயக்குநர்கள் இவரை முன்மாதிரியாக வைத்து சினிமா வாய்ப்பு தேட சென்னை புறப்பட்ட காலம் அது.

பொதுவாகவே உலக சினிமாக்கள், சினிமா விழாக்களில்தான் 1980-களில் திரையிடப்படும். அதனைப் பார்த்து அதுபோல தமிழில் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வெகு சில இயக்குநர்களுக்கு மட்டுமே இருந்தது. பாலசந்தர், மகேந்திரன், பாலு மகேந்திரா, பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்கள் இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

குறிப்பாக தமிழ் சினிமா நாடகத்தனத்துக்கு மாற்றாக அமைந்த படம் என முள்ளும் மலரும், 16 வயதினிலே, ஒரு வீடு இரு வாசல், உதிரிப் பூக்கள் ஆகிய படங்களைச் சொல்லலாம்.

முள்ளும் மலரும் படத்தில் ஒளிப்பதிவு இயக்குநர் பாலு மகேந்திரா. அதில் இதுவரை பயன்படுத்தாத கலர் டோன்கள், கேமரா பில்டர்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இருந்தார். இன்று புதுப்பேட்டை, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் காமிக் கலர் பயன்படுத்தி படம் எடுப்பதற்கு முன்னோடி மகேந்திரனின் படங்கள்.

மிக எளிதான கதை, உலக சினிமா ஃபார்மெட் திரைக்கதைக்குள் நம் உள்ளூர் கதைகளை சொல்லும் விதம், குறும்பட பாணியில் அமைந்த காட்சியமைப்புகள் மகேந்திரனை மற்ற இயக்குநர்களிடமிருந்து வித்யாசப்படுத்திக் காட்டியது.

மிகக் குறைந்த மேக் அப் உடனோ அல்லது மேக் அப் இல்லாமலோ இருக்கும் இவரது கதாபாத்திரங்கள். இவர் பின் நாட்களில் இயக்கி தோல்வி அடைந்த சாசனம் படம்வரை இவரது பரிசோதனை முயற்சிகள் தொடர்ந்தவண்ணமே இருந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்