ஆப்நகரம்

தயாரிப்பாளராக மாறும் சின்னதிரை நடிகை நீலிமாவுடன்ம் ஒரு சந்திப்பு

சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் தனது நடிப்பால் பலரின் மனதை கொள்ளை கொண்டவர் நீலிமா ரானி. இவர் நடிக்காத சீரியலே கிடையாது என்று சொன்னாலும் மிகையாகாது அந்த அளவிற்கு அவர் தமிழில் உள்ள எல்லா சீரியல்களிலும் நடித்துள்ளார்.

TNN 14 Oct 2017, 1:13 pm
சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் தனது நடிப்பால் பலரின் மனதை கொள்ளை கொண்டவர் நீலிமா ராணி. இவர் நடிக்காத சீரியலே கிடையாது என்று சொன்னாலும் மிகையாகாது அந்த அளவிற்கு அவர் தமிழில் உள்ள எல்லா சீரியல்களிலும் நடித்துள்ளார்.
Samayam Tamil a interview with neelima rani
தயாரிப்பாளராக மாறும் சின்னதிரை நடிகை நீலிமாவுடன்ம் ஒரு சந்திப்பு


அவர் சென்னை டைம்ஸ்சுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நான் சின்னத்திரையில் எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறேன். வில்லியாகவும் நடித்திருக்கிறேன் . நான் பல ஆண்டுகள் தொடர்ந்து சின்னதிரையிலும் , வெள்ளித்திரையிலும் நடித்த அனுபவம் இருப்பதால் தற்போது தயாரிப்பாளராக பணியாற்ற தொடங்கியுள்ளேன் . அதற்கு சரியான தருணம் இப்போதுதான் அமைந்துள்ளது. நானும் எனது கணவரும் சேர்ந்து ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும்’ நிறம் மாறாத பூக்கள்’ என்ற மெகாத் தொடரை இயக்கி வருகிறோம். இது மற்ற சீரியல் மாதிரி இல்லாமல் வித்தியாசமாக பயணிக்கிறது.

ஒரே நேரத்தில் நடிப்பு , இயக்கம் , மற்றும் வீடு ஆகியவற்றை சமாளிப்பது சவாலாகத்தான் இருக்கிறது.நடிகை ராதிகா அவர்கள்தான் எனக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்கள் .அவர்களை பார்த்து பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்

இவ்வாறு அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்

a interview with neelima rani

அடுத்த செய்தி

டிரெண்டிங்