ஆப்நகரம்

பிக்பாஸ் ஜனனிக்காக காத்திருக்கும் பிரம்மாண்ட படம்!

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட நடிகை ஜனனியின் வருகைக்காக ஒரு பிரம்மாண்ட படம் காத்திருக்கிறது.

Samayam Tamil 22 Sep 2018, 1:41 pm
பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட நடிகை ஜனனியின் வருகைக்காக ஒரு பிரம்மாண்ட படம் காத்திருக்கிறது.
Samayam Tamil janani iyre2


நடிகை ஜனனி ஐயர் தற்போது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது.
தற்போது பிக்பாஸ் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நடிகை ஜனனி இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார். அடுத்த வாரம் பிக்பாஸ் முடிந்ததும் நடிகை ஜனனி ஐயர் வெளியில் வந்து ஒரு பிரம்மாண்ட இயக்குனர் படத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யை வைத்து ‘புலி’ படத்தை இயக்கிய சிம்புதேவன் அடுத்து எடுக்கும் படத்தில் தான் ஜனனி ஐயர் நடிக்கவுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார். வழக்கம் போல வெங்கட் பிரபு படங்களில் இருக்கும் டீம் - பிரேம்ஜி, வைபவ், ஜெ ய், சிவா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்