ஆப்நகரம்

நீதிபதிகள் ‘காலா’ படத்தைப் பார்க்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!!

வீடு இழந்தவர்களின் வலியைப் புரிந்துகொள்ள ஏதுவாக, நீதிபதிகள் ‘காலா’ படத்தைப் பார்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Sep 2018, 9:59 pm
வீடு இழந்தவர்களின் வலியைப் புரிந்துகொள்ள ஏதுவாக, நீதிபதிகள் ‘காலா’ படத்தைப் பார்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil நீதிபதிகள் ‘காலா’ படத்தைப் பார்க்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!!
நீதிபதிகள் ‘காலா’ படத்தைப் பார்க்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!!


இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியான திரைப்படம் ‘காலா’. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியான இந்தத் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

மும்பையின் தாராவி பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், நடிகர் ரஜினிகாந்த் மக்களின் நில உரிமைக்காக போராடுவதாக கதை அமைந்திருக்கும். மேலும், மக்கள் நிலம் இல்லாமல் சந்திக்கும் சிக்கல்கள் மிகவும் எதார்த்தமாக பேசப்பட்டிருக்கும்.

இந்நிலையில், சென்னை பெருங்களத்தூர் பகுதியில் புறம்போக்கு இடத்தில் வீடு கட்டியவர்களுக்கு மாற்று இடம் முறையாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதில், மாற்று இடம் கிடைக்கதாவர்களின் வலியைப் புரிந்துகொள்ள நீதிபதிகள் காலா படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்