சென்னை: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கவிருக்கும் இருமொழி படத்துக்கு 'அபிமன்யு' என பெயரிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளுக்கும் ஏற்ற வகையில் படத்துக்கு தலைப்பிட வேண்டும் என்று மகேஷ்பாபு கேட்டுக் கொண்டதையடுத்து முருகதாஸ் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாரத இதிகாசங்களில் ஒன்றாக மகாபாரதத்தில் சிறந்த வில்லாளியாக திகழ்ந்த அர்ஜுனனின் மகன் 'அபிமன்யு' ஆவார். இவர் குருஷேத்திர போரில் பாண்டவர்களுக்காக சண்டையிட்டு வீர மரணம் அடைந்தார். அவரது பெயரை இப்படத்துக்கு வைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனினும், இப்படத்தின் தலைப்பு குறித்து படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பபர்க்கப்படுகிறது. மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ராகுல் பரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தின் வில்லனாக இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளுக்கும் ஏற்ற வகையில் படத்துக்கு தலைப்பிட வேண்டும் என்று மகேஷ்பாபு கேட்டுக் கொண்டதையடுத்து முருகதாஸ் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாரத இதிகாசங்களில் ஒன்றாக மகாபாரதத்தில் சிறந்த வில்லாளியாக திகழ்ந்த அர்ஜுனனின் மகன் 'அபிமன்யு' ஆவார். இவர் குருஷேத்திர போரில் பாண்டவர்களுக்காக சண்டையிட்டு வீர மரணம் அடைந்தார். அவரது பெயரை இப்படத்துக்கு வைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனினும், இப்படத்தின் தலைப்பு குறித்து படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பபர்க்கப்படுகிறது. மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ராகுல் பரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தின் வில்லனாக இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.