ஆப்நகரம்

AR Rahman: கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1கோடி வழங்கிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தனது குழுவின் சார்பாக் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

Samayam Tamil 3 Sep 2018, 10:31 am
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தனது குழுவின் சார்பாக் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
Samayam Tamil கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1கோடி வழங்கிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!!
கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.1கோடி வழங்கிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!!


கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக, அங்கு பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

தற்போது, மழைநீர் வடிந்து இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், அங்கு எலிக்காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 28 பேர் வரை இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை கேரளாவிற்கு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசைநிகழ்ச்சி நடத்தி வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தனது இசைக்குழுவுடன் சேர்ந்து ரூ.1 கோடி தொகையை கேரளா வெள்ள நிவாரணத்திற்கு வழங்கியுள்ளார். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்