ஆப்நகரம்

இசைப்புயல் இந்தியாவிற்கும், உலகிற்கும் கிடைத்த பரிசு : பிரபல பாலிவுட் நடிகை புகழாரம்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவிற்கும், உலகிற்கும் கிடைத்த அரிய பரிசு என பாலிவுட் நடிகை தியா மிர்சா புகழாரம் சூட்டியுள்ளார்.

Samayam Tamil 16 Jul 2017, 10:05 am
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவிற்கும், உலகிற்கும் கிடைத்த அரிய பரிசு என பாலிவுட் நடிகை தியா மிர்சா புகழாரம் சூட்டியுள்ளார்.
Samayam Tamil a r rahman is a gift to india and world says dia mirza
இசைப்புயல் இந்தியாவிற்கும், உலகிற்கும் கிடைத்த பரிசு : பிரபல பாலிவுட் நடிகை புகழாரம்!


லண்டனில் நேற்று இன்று நாளை என்ற பெயரில் லைவ் நிகழ்ச்சி நடத்திய இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் நிகழ்ச்சியில் பெரும்பாலும் தமிழ் பாடல்களே பாடினார் என்று வட இந்தியர்கள் குற்றம் சாட்டினர். இதனால் நிகழ்ச்சிக்கு பாதியிலேயே வெளியேறிய பலரும், தங்களின் பணம் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் சமூக வலைதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தொலைக்காட்சி விவாதங்களில் கூட இதுகுறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை தியா மிர்சா ஏ.ஆர்.ரஹ்மானை புகழ்ந்து பேசியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் திரை உலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவரின் சாதனைகள் பிரமிக்க செய்வதாக உள்ளது. அவர் இந்தியாவிற்கும், உலகிற்கும் கிடைத்த பரிசு என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவரது இசை எப்போதும் மிகவும் இனிமையானது என்றும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்