ஆப்நகரம்

பழசை மறக்காததால் பந்தா இல்லாமல் பழகும் காமெடி நடிகர்!

பழசை மறக்காததால் பந்தா இல்லாமல் பழகும் காமெடி நடிகர்!

TOI Contributor 6 May 2017, 6:58 pm
சினிமாவில் நடிக்கும் நகைச்சுவை நடிகர்களின் உண்மையான வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காது என்று சொல்வதுண்டு. அது உதாரணமாக இருந்துள்ளார் தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் நகைச்சுவை நடிகர் யோகி பாபு. பன்னி மூஞ்சி வாயா எனும் காமெடி மூலம் மக்களிடம் சென்ற யோகி பாபு அதன் பின்னர் தன் தனித்துவ நடிப்பால் மிகவும் பிரபலமடைந்தார். ஆண்டவன் கட்டளை படம் மூலம் பெரும் பாராட்டுகளையும் குவித்தார்.
Samayam Tamil a sad story of tamil cinemas most wanted comedian
பழசை மறக்காததால் பந்தா இல்லாமல் பழகும் காமெடி நடிகர்!


ரஜினி, அஜித், விஜய், ஷாருக்கான் என்று பலரும் யோகிபாபுவின் நண்பர்கள் ஆவர். ஆனால் இந்த இடத்திற்கு வரூவதற்கு போகி பாபு பட்டது கொஞ்ச நஞ்ச கஷ்டமல்ல! பரட்டை முடியுடன் இருக்கும் இவர் ரோட்டில் சென்றாலே, பெண்கள், குழந்தைகள் பயந்து ஓடிவிடுவார்களாம். அதனால் பெரும் மனவேதனையில் இருந்துள்ளார் யோகிபாபு. தன் உருவத்தால் நடிக்க வாய்ப்பு கேட்கவே தயக்கமாக இருந்த இவரை பார்த்த டிவி இயக்குநர் ஒருவர் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். டிவி ஷோவில் காமெடியனாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இவரது வித்தியாசமான தோற்றத்தை பார்த்து மக்கள் சிரிக்க ஆரம்பித்த உடன் யோகிபாபு தலை நிமிர்ந்து நடக்க தொடங்கினார்.

அதன் பின்னர் யாமிருக்க பயமேன் படம் மூலம் புகழடைந்த யோகி பாபுவை வைத்து இன்று படம் எடுக்க போட்டி போடுகின்றனர். எந்த பந்தாவும் இல்லாமல் அதே எளிமையுடன் யோகி பாபு நடித்து வருகிறார். இன்று உயர்ந்த இடத்திற்கு வந்தாலும் தான் கடந்த வந்த பாதையை மறக்காததால் தான் யோகி பாபு இன்றும் உயர்ந்து நிற்கிறார்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்