ஆப்நகரம்

Brigida: மலர் டீச்சர் சாய் பல்லவியை மிஞ்சும் ஆஹா கல்யாணம் பவி டீச்சர்!

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவியை மிஞ்சும் அளவிற்கு தற்போது ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் பவி டீச்சராக பிரிகிதா நடித்து வருகிறார்.

Samayam Tamil 4 Nov 2019, 4:50 pm
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் பிரேமம். சாய் பல்லவி, நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வந்த படம் தான் பிரேமம். காதலுக்கு மரியாதை கொடுத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் சாய் பல்லவி மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு கதாபாத்திரமாக மலர் டீச்சர் கதாபாத்திரம் அமைந்துள்ளது.
Samayam Tamil Sai Pallavi Pavi Teacher


கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் முடிச்சிட்டேன்: கேப்மாரி டிரைலர்!

வெறும், ரூ.4 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.60 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. காதலர்கள் மத்தியில் தாறுமாறாக வரவேற்பு பெற்ற மாஸ் படம். தற்போது இந்த படத்தை ஓவர் டேக் செய்யும் விதமாக குறிப்பாக மலர் டீச்சராக வரும் சாய் பல்லவியை மிஞ்சும் விதமாக பவி டீச்சர் நடித்து வருகிறார். ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் பவி டீச்சராக பிரிகிதா நடித்துள்ளார்.

இன்றய இளம் காதல் ஜோடிகளுக்கு என்பி மற்றும் பவி என்றால், நினைவிற்கு வருவது பிரிகிதாதான். அந்தளவிற்கு யூடிப்பில் சாதனை படைத்து வருகின்றனர். தற்போது வரை 7 எபிசோடுகளை கடந்துவிட்டது ஆஹா கல்யாணம். இந்த சீரிஸை பார்க்கும் ரசிகர்கள் எப்போது, பவி, என்பி காதல் திருமணம் நடக்கும் என்று தங்களுக்குள்ளாக கேட்டு வருகின்றனர்.

வேலைக்காரனை ஓவர்டேக் செய்த நம்ம வீட்டுப்பிள்ளை!

காதலனுக்கு மொபைல் போன் வாங்கி தருவதும், அவனிடம் காதலை சொல்லி, அவனுடைய பதிலுக்காக காத்திருப்பதிலும் சரி, பிரிகிதாவின் நடிப்பி பிரமாதம். ஒரு கட்டத்தில் என்ன சொல்லுவான் என்று ஏக்கத்தோடு அவனைத் தேடி வரும் பவிக்கு உன்னை எனக்கு பிடிக்கும் என்று காதலன் கூறும் காட்சிக்கு பார்க்கும் ரசிகர்களின் இதயங்களில் காதல் மணிதான் அடிக்கிறது. அதன் பிறகு அவர்கள் செய்யும் சின்ன சின்ன ரொமான்ஸ் இன்றைய இளைஞர்களின் இதயங்களை வருடச் செய்கிறது. இதில், பவி இளம் பெண்களுக்கு ஒரு ரோல் மாடலாக அமைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கவினை நினைத்து ஆனந்த கண்ணீர் விட்ட லோஸ்லியா : இந்த வீடியோவை பார்த்தீங்களா?

காதலர்கள் இடையில், சின்ன சின்ன சண்டைவருவது அவர்களது காதலின் ஆழத்தை அதிகப்படுத்தனுமே தவிர, அவர்களுக்கு இடையில் பிரிவை ஏற்படுத்தக்கூடாது. மேலும், காதலர்களுக்கு இடையில், நண்பர்கள் வரக்கூடாது. ஆனால், இதற்கு நேர்மாறாக அமைந்தது தான் இந்த ஆஹா கல்யாணம்.

ஒரு கட்டத்தில், தனக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள் என்று காதலி தனது காதல்கிட்ட ஒரு பொய் சொல்லும் காட்சியும், அதற்கு காதலனின் வலியையும் கச்சிதமாக காட்சிப்படுத்தியிருப்பார் ஆஹா கல்யாணம் இயக்குநர். ஆனால், அது பொய் என்று காதலனுக்கு தெரியாத நிலையில், சொந்த ஊருக்கு செல்லும் காதலன், பள்ளி தோழியை சந்தித்து அவர் மீது காதல் கொள்வதும் ரசிகர்களுக்கு ஆச்சரியம்.

தான் செய்தது தவறி என்று எண்ணி, காதலனை தேடி அவனது சொந்த ஊருக்கு வரும் காதலிக்கு அதிர்ச்சி காத்திருக்கும் நிகழ்வு தான் வேறொரு பெண்ணுடன் திருமணத்திற்கு தயாரான தனது காதலன். இதில் யாருடைய காதல் ஜெயித்தது? என்பது தான் கிளைமேக்ஸ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்