ஆப்நகரம்

போலி கணக்குகளால் தலைவலி: பிக் பாஸ் அபிராமி வெங்கடாசலம் எடுத்த அதிர்ச்சி முடிவு

பிக் பாஸ் அபிராமி தனது அதிகாரப்பூர்வ டிக்டாக் கணக்கை நீக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Apr 2020, 1:25 pm
அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். அவர் பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார்.
Samayam Tamil Abhirami Venkatachalam


அந்த நிகழ்ச்சி மூலமாக தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பாப்புலர் ஆனார் அவர். அதன் பிறகு அவர் ஒரு மலேசிய தமிழ் படத்தில் நடிக்கிறார் என செய்திகள் வந்தது. மேலும் நடிகர் ஆரியின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் அபிராமி நடிக்கிறார். அதே படத்தில் பிக் பாஸ் லொஸ்லியாவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் அபிராமி. இன்ஸ்டாகிராமில் அவருக்கு அதிகாரபூர்வமான கணக்கு உள்ளது. மேலும் டிக்டாக்கிலும் அவருக்கு கணக்கு உள்ளது. ஆனால் அதில் இவரது பெயரில் பல போலி கணக்குகள் இருக்கின்றன. ரசிகர்களும் அந்த போலி கணக்குகளை அதிக அளவில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இது பற்றி அபிராமி பலமுறை புகார் கூறியிருந்த நிலையில், அந்த போலி கணக்குகள் தற்போதும் இவருக்கு தலைவலியை ஏற்படுத்தி கொண்டு இருக்கின்றன.

அதனால் தனது உண்மையான டிக் டாக் கணக்கை நீக்குவதாக அபிராமி தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே அதிகாரப்பூர்வ கணக்கு இருக்கிறது என்றும் அதையும் விரைவில் நீக்கிவிடுவேன் என்று கோபத்துடன் கூறியுள்ளார் அவர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்