ஆப்நகரம்

பல வருடங்கள் கழித்து மீண்டும் கணவன் மனைவியாக நடிக்கும் அபிஷேக் ஐஸ்வர்யா ராய்!

அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் எட்டு வருடம் கழித்து மீண்டும் ஒரு படத்தில் கணவன் மனைவியாக நடிக்கவுள்ளனர்.

Samayam Tamil 3 Aug 2018, 5:34 pm
அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் எட்டு வருடம் கழித்து மீண்டும் ஒரு படத்தில் கணவன் மனைவியாக நடிக்கவுள்ளனர்.
Samayam Tamil பல வருடங்கள் கழித்து மீண்டும் கணவன் மனைவியாக நடிக்கும் அபிஷேக்  ஐஸ்வர்யா ராய்!


பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும், நடிகை ஐஸ்வர்யா ராய்யும் காதலித்து திருமணம் கொண்டவர்கள். நடிகை ஐஸ்வர்யா ராய், திருமணத்துக்குப் பிறகும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கிய ‘ராவன்’ படத்தில் அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் கணவன் மனைவியாக நடித்திருந்தனர். அந்தப் படத்திற்குப் பிறகு இருவரும் எந்த ஒரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. ‘ராவன்’ வெளியாகி 8 வருடம் ஆகிவிட்டது.

இந்நிலையில் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராய்யும் இணைந்து ஒரு படத்தில் கணவன் மனைவியாக நடிக்கவுள்ளனர். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்