ஆப்நகரம்

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தை தத்தெடுத்த நடிகர்!!

பொங்கலை முன்னிட்டு பாலமேட்டில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞரின் தங்கைக்கு அண்ணனாக இருந்து அவரின் படிப்பிற்கு உதவுவதாக நடிகர் அபி சரவணன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 21 Jan 2018, 2:28 am
பொங்கலை முன்னிட்டு பாலமேட்டில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞரின் தங்கைக்கு அண்ணனாக இருந்து அவரின் படிப்பிற்கு உதவுவதாக நடிகர் அபி சரவணன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil abi saravanan a movie actor from madurai has announced that he will take care of the family of dindugal teenager who died in palamedu jallikattu
ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தை தத்தெடுத்த நடிகர்!!


பொங்கல் தினத்தை முன்னிட்டு, பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. உலகப்புகழ்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண பல்லாயிர மக்கள் அங்கு குவிந்தனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த திண்டுக்கலைச் சேர்ந்த காளிமுத்து என்ற இளைஞர் பரிதாபமாக மாடு முட்டி உயிரிழந்தார். இந்த சோகமான சம்பவத்தையடுத்து, அவரின் குடும்பத்திற்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திய கமிட்டியாரும்,அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என அவரின் நண்பர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், நடிகர் அபி சரவணன் அந்த இளைஞரின் குடும்பத்திற்கு இறுதி சடங்கிற்கு ரூ.5000 நிதி உதவி செய்தார். மேலும், அந்த இளைஞரின் 10 வயது தங்கையுடைய படிப்பிற்கான செலவு அனைத்தையும் அண்ணன் ஸ்தானத்தில் இருந்து உதவ உள்ளதாக அறிவித்து நெகிழ செய்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்