ஆப்நகரம்

சிவகார்த்திகேயனை தவிர யாருமே பார்க்க வரல: அபி சரவணனிடம் கூறிய பரவை முனியம்மா

பரவை முனியம்மா வீட்டிற்கு நேரில் சென்று அபி சரவணன் உதவி செய்துள்ளார்.

Samayam Tamil 31 Oct 2019, 10:43 am
பரவை முனியம்மா உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த மூன்று வருடங்களாகப் படத்தில் நடிப்பதை தவிர்த்துவிட்டார்.
Samayam Tamil muniyama


படங்களில் நடிக்காததால் வறுமை தன்னை வாட்டி வதைப்பதாக கூறினார். உடனே அவருக்கு தமிழக அரசு சார்பில் வைப்புத் தொகை மூலம் மாதம் 6 ஆயிரம் ருபாய் தொகை கிடைக்கிறது. ஆனால் அது அனைத்தும் மருத்துவ செலவுக்கே காலியாகி விட்டதாக பரவை முனியம்மா குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மருத்தவ செலவுக்குப் பணம் இல்லாத காரணத்தினால் பரவை முனியம்மாவை வீட்டில் வைத்து வைத்தியம் செய்கின்றனர். இந்த நிலையில் உடல்நிலை மோசமாக இருக்கும் முனியம்மாவை, நடிகர் அபி சரவணன் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

'ரவுடி பேபி'யின் சாதனையை அசால்டா ஓரங்கட்டிய வாரிசு நடிகர் பட பாட்டு

இது குறித்து அவர் கூறுகையில், 'தீபாவளியையே நான் பரவை முனியம்மாவோடு கொண்டாட வேண்டும் என்று தான் விரும்பினேன். ஆனால் சுஜித் பற்றி கேள்விப்பட்டு அங்கு சென்றுவிட்டேன். அதன் பிறகு நேற்று தான் பரவை முனியம்மாவின் வீட்டிற்கு சென்றேன். அவர்களுக்கு தீபாவளிக்கு உடை, பழம், ஹார்லிக்ஸ் என தேவையான பொருட்களை வாங்கி கொண்டு சென்றேன்.

என்னைப் பார்த்து பரவை முனியம்மா ரொம்ப சந்தோஷப்பட்டார். 80 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன் ஆனால் இது வரை யாருமே வந்து என்னை பார்க்கல. சிவகார்த்திகேயன் மட்டும் வந்து 30 ஆயிரம் ருபாய் கொடுத்தார். அவருக்கு அடுத்து நீ தான் வந்திருக்க' என்றார்.

வாய் பேச முடியாமல், காது கேட்காமல் உயிருக்கு போராடி வரும் பரவை முனியம்மா!

தொடர்ந்து பேசிய அபி சரவணன், 'பரவை முனியம்மாவிடம் 8 ஆயிரம் ருபாய் பணம் கொடுத்துவிட்டு, சிகிச்சைக்கு ஆகும் செலவையும் ஏற்றுக் கொள்கிறேன் என கூறிவிட்டு வந்தேன்' என்று கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்