ஆப்நகரம்

பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் மரணம்

பழம்பெரும் தமிழ் சினிமா இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் உடல்நலக்குறைவால், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

TNN 15 Jun 2016, 9:40 pm
பழம்பெரும் தமிழ் சினிமா இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் உடல்நலக்குறைவால், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.
Samayam Tamil ace tamil cinema director a c tirulokachandar passed away
பழம்பெரும் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் மரணம்


மறைந்த திருலோகசந்தர், எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து, ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை தமிழில் இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பல வெரைட்டியான கதைக்களங்களில் படங்களை இயக்கியுள்ளார்.

வீரதிருமகன், காக்கும் கரங்கள், அதே கண்கள், என் தம்பி, அன்பளிப்பு, என் தம்பி, இரு மலர்கள், தெய்வ மகன், எங்கிருந்தோ வந்தாள், பாபு, பத்ரகாளி, பைலட் பிரேம்நாத், அன்புள்ள அப்பா உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கிய திருலோகசந்தர், சமீபகாலமாக, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனளிக்காமல், அவர் உயிரிழந்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்