ஆப்நகரம்

சிவகார்த்திகேயனின் வாக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்: சத்யபிரதா சாஹூ!

நடிகர் சிவகார்த்திகேயன் யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாததால், அவரது வாக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Apr 2019, 2:04 pm
நடிகர் சிவகார்த்திகேயன் யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாததால், அவரது வாக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Sivaka


கடந்த 18ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஒன்றாக வைக்கப்பட்டது. இதில், சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என்று பலரும் தங்களது ஜனநாயகக் கடமையான ஆற்றினர். அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று பிரபலங்கள் பலரும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.

அதே போன்று நடிகர் சிவகார்த்திகேயனும் 17ம் தேதி, நாளை அனைவரும் தவறாமல் வாக்களிப்போம்…இது நம் கடமை மட்டுமல்ல உரிமையும் கூட என்று பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், தான், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஷெப்பர்ட் பள்ளி வாக்குச் சாவடிக்கு சென்ற போது அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதன் காரணமாக சிறிது நேரம் அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. அவருடன் வந்த அவரது மனைவி ஆர்த்தி வாக்களித்தார்.

நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களிக்கவில்லை: சர்ச்சையை ஏற்படுத்தும் தேர்தல் அதிகாரி!

பெயர் இல்லாமல் வாக்களித்த சிவகார்த்திகேயன்: சர்ச்சையில், அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹூ!

தமிழகத்தில் வாக்குப்பதிவு: திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வாக்குப்பதிவு சிறப்பு புகைப்பட தொகுப்பு!

இதையடுத்து, பல மணிநேரம் அதிகாரிகளுடன் பேசிய பின்னர், அவருக்கு வாக்களிக்க அனுமதி வழங்கினர். வாக்களித்த பின்னர், சிவகார்த்திகேயன் டுவிட்டர் பக்கத்தில், வாக்குரிமை என்பது உங்களது உரிமை. அதற்காக போராடுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில், சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதி வழங்கிய வாக்குச்சாவடி அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருந்தார்.

மகள் நிவேதா தாமஸ், யோகி பாபுவுடன் நடந்து செல்லும் ரஜினி: லீக்கான தர்பார் ஷூட்டிங் வீடியோ!



இதற்கிடையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாஹூ கூறுகையில், நடிகர் சிவகார்த்திகேயன் யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாது. மேலும், விதியை மீறி வாக்களித்திருந்தாலும், அவரது வாக்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனினும், சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்