ஆப்நகரம்

Gaja Cyclone: மக்களை மீட்டெடுக்க வாருங்கள்: தல-தளபதி ரசிகர்களுக்கு நடிகர் ஆரி வேண்டுகோள்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க வாருங்கள் என தல-தளபதி ரசிகர்களுக்கு நடிகர் ஆரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Samayam Tamil 19 Nov 2018, 2:33 pm
தல-தளபதி ரசிகர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்க முன்வர வேண்டும் என நடிகர் ஆரி கூறியுள்ளார்.
Samayam Tamil Gaja Cyclone: மக்களை மீட்டெடுக்க வாருங்கள்: தல-தளபதி ரசிகர்களுக்கு நடிகர் ஆரி வேண்டுகோள்!
Gaja Cyclone: மக்களை மீட்டெடுக்க வாருங்கள்: தல-தளபதி ரசிகர்களுக்கு நடிகர் ஆரி வேண்டுகோள்!


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ”கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் இன்னும் சரியாக சென்று சேரவில்லை. அங்கிருக்கும் மக்கள் முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ’மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளையின் வாயிலாக என்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளேன். அத்துடன் நிவாரணப் பொருட்களை சேகரித்து கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். நம்முடைய மக்களுக்கு நாம் தான் கரம் கொடுத்து உதவி செய்ய வேண்டும்.

சர்கார் பிரச்சனையின் போது விஜய் ரசிகர்கள், இலவசங்களை தூக்கியெறிந்து வீடியோ பகிர்ந்தது போல, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உதவி செய்து அதையும் வீடியோவாக பகிருங்கள். அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் படத்தின் பேனர்களுக்காக செய்யும் செலவுகளை உதவியாக கொடுங்கள். தல-தளபதி ரசிகர்கள் என்றாலே வலைதளங்களில் சண்டை போட்டு கொள்வார்கள் என்ற நிலையை மாற்றி, மக்களுக்கு உதவி செய்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும்”. இவ்வாறு நடிகர் ஆரி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்