ஆப்நகரம்

நானும், அதிதியும் திருமணம் செய்துகொண்டது உண்மை தான் – அபி சரவணன்

நடிகை அதிதி மேனனை யாரே சிலா் மூளைச் சலவை செய்து தனக்கு எதிராக புகாா் அளிக்க வைத்துள்ளதாக நடிகா் அபி சரவணன் குற்றம் சாட்டி உள்ளாா்.

Samayam Tamil 20 Feb 2019, 6:50 pm
நடிகை அதிதி மேனனை யாரே சிலா் மூளைச் சலவை செய்து தனக்கு எதிராக புகாா் அளிக்க வைத்துள்ளதாக நடிகா் அபி சரவணன் குற்றம் சாட்டி உள்ளாா்.
Samayam Tamil Abi Adhiti


கடந்த 2016ம் ஆண்டு வெளியான பட்டதாரி படத்தில் அபி சரவணன், அதிதி மேனன் ஜோடியாக நடித்திருந்தனா். இவா்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், இவா்களுக்கிடையே திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது. மேலும் இவா்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் சிறிது காலத்திலேயே இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடா்ந்து அதிதி மேனன் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகா் அபி சரவணன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா்.


மேலும் அதிதி மேனம் சென்னை காவல் ஆணையரிடம் வழங்கிய புகாரில், தன்னை பதிவு திருமணம் செய்துகொண்டது போன்ற போலி சான்றிதழ்களை அபி சரவணன் தயாரித்து தன்மீது புகாா் அளித்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தாா்.

இந்நிலையில் சென்னை சாலிகிராமம் பகுதியில் செய்தியாளா்களை சந்தித்த அபி சரவணன், நானும், அதிதி மேனனும் பதிவு திருமணம் செய்து கொண்டது உண்மை தான். இதற்கான ஆவணங்களும், புகைப்படங்களும் தன்னிடம் இருப்பதாக அவா் குறிப்பிட்டாா்.

புகைப்படங்கள், ஆவணங்களை காட்டி அவா் பேசுகையில், தற்போது அதிதியுடன் இருக்கும் ஆண் நண்பா் உள்பட சிலா் அவரை மூளைச் சலவை செய்து தனக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வைத்துள்ளனா். அதிதி மேனம் மனம் திருந்தி வந்தால் மீண்டும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்