ஆப்நகரம்

ஜெர்மனியிலும் கொடி கட்டி பறக்கும் ’தல’ அஜித் புகழ்; எதற்காகத் தெரியுமா!

சென்னை: நடிகர் அஜித்தை ஜெர்மன் நிறுவனம் ஒன்று பாராட்டி உள்ளது.

Samayam Tamil 5 Dec 2018, 3:28 pm
தமிழகத்தில் ‘தல’ என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் அஜித். தனது கடின உழைப்பால் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தொடர் தோல்விகள் வந்தாலும், துணிவோடு மீண்டும் வரும் ஆற்றல் படைத்தவர்.
Samayam Tamil Ajith


சமீபத்தில் சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது. அஜித்திற்கு நடிப்பில் மட்டுமல்லாமல், கார் பந்தயம், ஆளில்லா விமானங்களைத் தயாரித்து பறக்க விடுவது உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் உண்டு.

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டியில் ஏரோநாட்டிகல் மாணவர்களின் தக்‌ஷா குழுவிற்கு ஆலோசகராக அஜித் செயல்பட்டு வருகிறார். இவரது ஆலோசனைப்படி, ஆளில்லா விமானத்தை இயக்கி, தக்‌ஷா குழு பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள வேரியோ ஹெலிகாப்டர் என்னும் நிறுவனத்திற்கு அஜித் சென்றுள்ளார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ”ஆர்வத்திற்கு எல்லைகள் ஏதும் இல்லை.

தனது படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற பின், விமானம் மூலம் கிராபென்டார்ப் நகருக்கு வந்தார். எங்களுடன் சில நாட்கள் செலவிட்டார். வேரியோ ஹெலிகாப்டர்கள் அஜித்தின் கனவு. அவர் தன்னுடைய சொந்த உழைப்பில் ஹோட்டல் அறையிலேயே வேரியோ மாடல்களை உருவாக்கியுள்ளார்.

காலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு, மாலையில் எங்களுடன் நேரம் செலவிட்ட தருணங்களும் உண்டு” என்று குறிப்பிட்டுள்ளது. ஜெர்மனி நிறுவனம் ஒன்று நடிகர் அஜித்தைப் பாராட்டியது, அவரது ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆளில்லா விமானங்களை தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்து இந்தியா, ஜெர்மனி நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அஜித்தின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும் என்று கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்