ஆப்நகரம்

நடிகர் ஆனந்தராஜின் தம்பி விஷம் குடித்து தற்கொலை

புதுச்சேரியில் வசித்து வந்த நடிகர் ஆனந்தராஜின் தம்பி கனகசபை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Samayam Tamil 6 Mar 2020, 9:10 am
நடிகர் ஆனந்தராஜின் தம்பி கனகசபை(55). அவர் புதுச்சேரி கோவிந்தசாலை திருமுடிநகரில் வசித்து வந்தார். திருமணமாகாத அவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். அவரிடம் பல பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் ஏலச்சீட்டு கட்டி வந்துள்ளனர்.
Samayam Tamil anandraj


இந்நிலையில் கனகசபை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்த உடனே போலீசார் விரைந்து வந்து கனகசபையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் ஏலச்சீட்டு நடத்தியதில் ரூ. 50 கோடி நஷ்டம் ஏற்பட்டதால் கனகசபை இப்படி ஒரு முடிவு எடுத்தது தெரிய வந்துள்ளது.

பணம் கட்டியவர்கள் அதை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் கனகசபை கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. கனகசபை இறந்த செய்தி அறிந்து அவரிடம் பணம் கட்டியவர்கள் அவரின் வீட்டிற்கு முன்பு கூடினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கனகசபை எழுதிய கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது இன்னும் தெரியவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்