ஆப்நகரம்

ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட உருக்கமான கடிதம்!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு நடிகராகவும் இந்த ஆண்டு வெற்றிகரமாக அமைந்தது

TOI Contributor 28 Dec 2016, 9:18 pm
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு நடிகராகவும் இந்த ஆண்டு வெற்றிகரமாக அமைந்தது. இது தொடர்பாக அவர் பத்திரிகைகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,
Samayam Tamil actor and music director gv prakash writes last letter of this year
ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட உருக்கமான கடிதம்!


அன்பு பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு,

வணக்கம்.

நான் இசையமைப்பாளராகவும், நடிகனாகவும் அறிமுகமான நாள் முதல் இன்று வரை ஆதரவளித்து வரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இசையமைப்பாளராக எனக்கு பேராதரவு அளித்த நீங்கள் நான், நடிகனாக மாற எடுத்த புது முயற்சிக்கு என்றென்றும் எனக்கு ஊன்று கோளாய் இருந்துள்ளது. கேனன்யா பிலிம்ஸ் தயாரிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் “புருஸ் லீ” பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் “அடங்காதே”, திருக்குமரன் எண்டர்டெயின்மேண்ட் தயாரிப்பில் வெங்கட் பக்கர் இயக்கத்தில் “4G”, பிரபல ஓளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் படம், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சசி இயக்கத்தில் உருவாகும் படம், இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் உருவாகும் படம், ரவி அரசு இயக்கத்தில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறேன்.

எனது இசைக்கும் நடிப்பாற்றலுக்கும் தாங்கள் அளித்து வரும் எல்லையற்ற அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள். என உருக்காமாக தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்