ஆப்நகரம்

‘சதுரங்க வேட்டை 2’ தயாரிப்பாளர் மீது வழக்குத் தொடர்ந்த நடிகர் அரவிந்தசாமி!

நடிகர் அரவிந்தசாமி, ‘சதுரங்க வேட்டை 2’ படத்தின் தயாரிப்பாளர் நடிகர் மனோபாலா மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

Samayam Tamil 22 Sep 2018, 4:59 pm
அரவிந்த் சாமி, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சதுரங்கவேட்டை 2’. இந்தப் படத்தை இயக்குனரும், காமெடி நடிகருமான மனோபாலா தயாரித்தார். இந்த படத்தில் நடித்ததற்கு அரவிந்த்சாமிக்கு மனோபாலா 1 கோடியே 79 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார். இந்த பாக்கியை வசூலித்து தரும்படி அரவிந்த் சாமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
Samayam Tamil sathuranga vettai


இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மனோபாலா, பட வெளியீட்டுக்கு முன்பு சம்பள பாக்கியை கொடுத்து விடுவதாகவும், முதல் கட்டமாக அக்டோபேர் 10ம் தேதிக்குள் 25 லட்சம் கொடுப்பதாகவும், நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் படத்தை வெளியிட மாட்டேன் என உத்தரவு அளித்திருந்தார். மனோபாலாவின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, அக்டோபேர் 12ம் தேதி இரு தரப்பினரும், நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்தில் சம்பள பிரச்சனை பற்றி பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்