ஆப்நகரம்

ஷிவதாவை பாராட்டிய ஆரி!

‘நெடுஞ்சாலை’ படத்தில் நடித்த நடிகை ஷிவதாவை, நடிகர் ஆரி பாராட்டியுள்ளார்.

TOI Contributor 1 Mar 2016, 10:55 am
‘நெடுஞ்சாலை’ படத்தில் நடித்த நடிகை ஷிவதாவை, நடிகர் ஆரி பாராட்டியுள்ளார்.
Samayam Tamil actor ari appreciates shivathaa
ஷிவதாவை பாராட்டிய ஆரி!

‘நெடுஞ்சாலை‘ படம் மூலம் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதியானவர் நடிகை ஷிவதா. நடிகர் ஆரி ‘ரெட்டைச்சுழி’, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ‘மானே தேனே பேயே’, ‘உன்னோடு கா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும், தன்னுடன் நடித்த நடிகைகளில் ‘நெடுஞ்சாலை’ நாயகியான ஷிவதாதான் எனக்கு பொருத்தமான ஜோடி, அவரது நடிப்பைப் பற்றி ரொம்பவே புகழ்ந்து பேசினார் ஆரி.
ஷிவதா பற்றி நம்மிடம் ஆரி கூறுகையில், ‘‘எந்தப் படமாக இருந்தாலும் தன்னுடன் நடிக்கும் கோ-ஆர்ட்டிஸ்ட் பங்கு ரொம்ப முக்கியம். தாம் நடிக்கும் ஒவ்வொரு காட்சிகளிலும் இருவருமே சரியாக நடிக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காட்சி நன்றாக வரும். அந்த வகையில், ‘நெடுஞ்சாலை’ படத்தில் என்னுடன் நடித்த ஷிவதா ஒரு திறமையான அற்புதமான நடிகை. மிக இயல்பாக அழகாக நடித்திருந்தார். அதோடு அவர் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட். எத்தனை பெரிய கேரக்டராக இருந்தாலும் ஒரே டேக்கில் ஓகே பண்ணி விடுவார்.
இப்படத்தில் ஷிவதாவிடமிருந்து எந்தமாதிரியான நடிப்பு வெளிப்பட்டிருக்கும் என்பதை அறிய ‘ஜீரோ’ படத்தை ஒரு ரசிகனாக நான் பார்க்க காத்திருக்கிறேன்’ என்கிறார் ஆரி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்