ஆப்நகரம்

குடிபோதையில் விபத்து: தலைமறைவான அருண் விஜய் கைதாகி ஜாமீனில் விடுதலை

குடிபோதையில் போலீஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தி தலைமறைவான நடிகர் அருண் விஜய் பரங்கிமலையில் உள்ள தென்சென்னை போக்குவரத்து துணை ஆணையர் போலீஸ் நிலையத்தில் இன்று ஆஜரானார்.

TNN 30 Aug 2016, 11:15 pm
குடிபோதையில் போலீஸ் வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தி தலைமறைவான நடிகர் அருண் விஜய் பரங்கிமலையில் உள்ள தென்சென்னை போக்குவரத்து துணை ஆணையர் போலீஸ் நிலையத்தில் இன்று ஆஜரானார்.
Samayam Tamil actor arun vijay arrest and then released
குடிபோதையில் விபத்து: தலைமறைவான அருண் விஜய் கைதாகி ஜாமீனில் விடுதலை


கடந்த 26ஆம் தேதி நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் திருமண வரவேற்பு சென்னை உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் பெரிய அளவில் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய் மது அருந்தி, வீட்டுக்கு செல்லும் வழியில் நுங்கம்பாக்கத்தில் போலீஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போலீஸ் வாகனம் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார்.

இதன் காரணமாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து பாண்டிபஜார் காவல் நிலையத்துக்கு அருண் விஜய்யை போலீசார் அழைத்த போது, தந்தை விஜயகுமாரின் காரில் தனியாக வருவதாக கூறினார். இதற்கு போலீசாரும் அனுமதி வழங்கினர். ஆனால் வெகுநேரமாகியும் அவர் பாண்டிபஜார் வரவில்லை.

இதனால், அவர் கைதுக்கு பயந்து தப்பிச் சென்றுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், அவரை ஜாமீனில் விடுதலை செய்யும் பிரிவின் கீழ் தான் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இந்நிலையில், அவர் தப்பிய ஓடியது தொடர்பாக, அருண் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் பரங்கிமலையில் உள்ள தென்சென்னை போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணைக்குப் பின்னர் இவரை பாண்டிபஜார் புலனாய்வு போக்குவரத்து போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து எழும்பூர் 13வது குற்றவியல் நீதிமன்றத்தில் அருண் விஜய் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு தனக்கு ஜாமீன் வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து சொந்த ஜாமீல் அவரை விடுதலை செய்ய கோர்ட் உத்தரவிட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்