ஆப்நகரம்

'மூடர் கூடம்’ இயக்குனருடன் கைகோர்க்கும் அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய், தற்போது ‘மூடர் கூடம்’ பட இயக்குனர் நவீனுடன் கைகோர்க்கவுள்ளார்.

Samayam Tamil 1 Nov 2018, 5:25 pm
நடிகர் அருண் விஜய், ‘செக்க சிவந்த வானம்’ படத்தை அடுத்து தற்போது ‘மூடர் கூடம்’ பட இயக்குனர் நவீனுடன் கைகோர்க்கவுள்ளார்.
Samayam Tamil cats
‘மூடர் கூடம்’ இயக்குனருடன் கைகோர்க்கும் அருண் விஜய்!


‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். அதையடுத்து ‘பிரியம்’ உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இருந்தாலும் அவரால் முன்னணி ஹீரோ இடத்தைப் பிடிக்க முடியவில்லை. அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘செக்க சிவந்த வானம்’. இந்தப் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி ஆகியோருடன் இணைந்து அருண் விஜய் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

அருண் விஜய் அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்திருந்தது அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. அதாரு அதாரு பாட்டில் கூட அருண் விஜய்க்காக தான் இந்த பாடல் என சொல்லி உற்சாகப்படுத்தி விட்டாராம்.

இந்நிலையில் நடிகர்அருண் விஜய் அடுத்ததாக ‘மூடர் கூடம்’ பட இயக்குனர் நவீனுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார். நட்புக்காக இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியும் நடிக்கிறாராம். இதை அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்