ஆப்நகரம்

AV30 Movie Pooja: பூஜையுடன் தொடங்கிய அருண் விஜய்யின் 30ஆவது படம்!

இயக்குநர் ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் 30ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 11 Sep 2019, 11:20 pm
ஹரிதாஸ் என்ற படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இயக்குநர் ஜி.என்.ஆர் குமரவேலன். தற்போது அருண் விஜய்யைக் கொண்டு புதிய படத்தை இயக்குகிறார். இது அருண் விஜய்யின் 30ஆவது படம். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதற்கு முன்னதாக குற்றம் 23 படத்தின் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
Samayam Tamil Arun Vijay


இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். மேலும், இயக்குநர் நரேன், அறிவழகன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: கல்யாணம் ஆனா கம்முனு இருக்கனும்…கமிட் ஆனா உம்முனு இருக்கனும்: பேஜ்லெர் ஃபர்ஸ்ட் லுக்!

Also Read This: Namma Veettu Pillai: பாட்டு கேட்கும் போதே அழுத இயக்குநர் பாண்டிராஜ்!

இதையும் படிங்க: ட்விட்டரை அலறவிட்ட ரஜினியின் தர்பார் செகண்ட் லுக் போஸ்டர்!

இப்படம் குறித்து இயக்குநர் குமரவேலன் கூறுகையில், இப்படம் ஒரு வித்தியாசமான க்ரைம் த்ரில்லர். இந்த வகை படங்கள் தமிழுக்கு புதிதல்ல. ஆனால் இதுவரை வந்தவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இதுவரை யாரும் பார்த்திராத பாணியில் இருக்கும். நடப்பு சூழலில் உள்ள சமூக அவலத்தின் ஒரு பகுதியை மையமாக கொண்டு தீவிரமாக அலசும் ஒரு த்ரில்லர் படமாக இருக்கும் என்றார்.


மேலும், இப்படத்தின் அருண் விஜய் இணைந்தது குறித்து அவர் கூறுகையில், பொதுவாக சினிமாவை உயிராய் நேருக்கும் ஒருவர் தான் அவரவர் கதைக்கு பொருத்தமாக இருப்பார். அப்படிப்பட்ட ஒருவர் ஏன் இப்படத்தில் இருக்கக் கூடாது என நினைத்தேன். இந்தக்கதையை முழுதாக முடித்த போதே அருண் விஜய் மனதில் வந்துவிட்டார்.

குற்றம் 23 படத்தில் காக்கி சட்டையில் அவரது நடிப்பு பலரும் ரசிக்கும்படியாக அமைந்தது. இப்படம் அவரது குற்றம் 23 போலீஸ் கதாப்பாத்திரத்தில் இருந்து வேறுபட்ட பாத்திரம். இரண்டு கதைகளின் களங்களும் முற்றிலும் வேறானது. அவரது பாத்திரம் மிகவும் புத்திக்கூர்மை வாய்ந்த, வலுவான ஒரு பாத்திரமாக இருக்கும். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை Movie Slides Pvt Ltd நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த மாதத்தில் இடையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தடம் படத்தில் அருண் விஜய்யுடன் பணிபுரிந்த கோபி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை அமைக்கிறார் என்றார்.

அண்மையில், அருண் விஜய், பிரபாஸ் நடிப்பில் சாஹோ படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து மாஃபியா படத்தில் நடித்து முடித்துவிட்டார். மேலும், அக்னி சிறகுகள், பாக்ஸர் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்