ஆப்நகரம்

தியேட்டர்ல மட்டும் எதுக்கு தேசிய கீதம்?- அரவிந்த் சாமி கேள்வி

திரையரங்குகளில் மட்டும் தேசிய கீதத்தை எதற்கு கட்டாயமாக்குகிறீர்கள் என நடிகர் அரவிந்த் சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 24 Oct 2017, 6:10 pm
திரையரங்குகளில் மட்டும் தேசிய கீதத்தை எதற்கு கட்டாயமாக்குகிறீர்கள் என நடிகர் அரவிந்த் சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil actor arvind swamy questioned about the supreme court about national anthem
தியேட்டர்ல மட்டும் எதுக்கு தேசிய கீதம்?- அரவிந்த் சாமி கேள்வி


சென்ற ஆண்டு நவம்பர் மாதம், உச்சநீதிமன்றம் திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்ப வேண்டும் எனவும், அதற்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இது குறித்த முடிவை மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்று கூறியது. மேலும் ஜனவரி 9க்குள் புதிய விதிகளை உருவாக்கவும் உச்சநீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியது.

இந்நிலையில் நடிகர் அரவிந்த் சாமி, “தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது நான் எழுந்து நின்று பாடுகிறேன், இதை நான் பெருமையாக கடைப்பிடிக்கிறேன்.
I will always stand up for our Natl Anthem & sing along,which I do with great pride.Never understood why it ws mandatory n cinema halls only — arvind swami (@thearvindswami) October 24, 2017 Why not everyday in all govt offices, courts, before assembly and parliament sessions? — arvind swami (@thearvindswami) October 24, 2017 ஆனால், திரையரங்குகளில் மட்டும் எதற்கு தேசிய கீதம் ஒலிபரப்புவதைக் கட்டாயமாக்குகிறீர்கள்? என்பது புரியவில்லை. அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சட்டப்பேரவை, பாராளுமன்றம் ஆகிய இடங்களுக்கு ஏன் கட்டாயமாக்கப்படவில்லை,” என தனது ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

Actor Arvind Swamy questioned about the Supreme Court which ordered the cinema theatres to play national anthem.

அடுத்த செய்தி

டிரெண்டிங்