ஆப்நகரம்

அப்பவே உடலுறவு பற்றி சொல்லிட்டாங்க! இப்போ ஒரு முத்தத்துக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கு: அரவிந்த்சாமி

கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பே உடலுறவு பற்றி சொல்லிவிட்டார்கள். ஆனால், இப்போது ஒரு முத்தக் காட்சிக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கு என்று நடிகர் அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.

TNN 15 Dec 2017, 3:00 pm
கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடலுறவு பற்றி சொல்லிவிட்டார்கள். ஆனால், இப்போது ஒரு முத்தக் காட்சிக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கு என்று நடிகர் அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil actor arvindswamy says about kissing scene in 15th international film festival chennai
அப்பவே உடலுறவு பற்றி சொல்லிட்டாங்க! இப்போ ஒரு முத்தத்துக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கு: அரவிந்த்சாமி


ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். இதனை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்(NFDC) மற்றும் இண்டோ சினி அப்ரிஷியேஷன் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 15வது சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த விழாவை நடிகர் அரவிந்த்சாமி துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், நிதி கிடைக்காமல் இந்த விழாவை நடத்துகிறார்கள். அவர்களுக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன். தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு படம் எடுப்பது என்பது எளிதான ஒன்று தான். ஆனால், அந்தப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்குவது தான் கடினம்.



கிட்டத்தட்ட 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாட்ஸாயனா காமசூத்திரத்தைப் பற்றி எழுதி வைத்தார். பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள இந்தப் படைப்பு பாலுணர்வு தொடர்பான ஒரு இலக்கியமாகவே இன்றும் போற்றப்படுகிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒரு சாதாரண முத்தக்காட்சிக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கு. காதல் காட்சிகளை விட பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சிகள் தான் இன்றைய படங்களில் அதிகமாக காட்டப்படுகிறது என்று கூறியுள்ளார்.
நேற்று தொடங்கிய இந்த திரைப்பட விழா வரும் 21ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.



இந்த திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு நிதி அளிக்காதது வேதனை அளிக்கிறது. ஆனால், கடந்த ஆண்டு கர்நாடக மாநில திரைப்பட விழாவுக்கு அம்மாநில அரசு மூன்றரை கோடி நிதி வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு அதற்கு 10 கோடி வழங்க இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், அடுத்தாண்டாவது, தமிழக அரசு திரைப்பட விழாவிற்கு நிதி அளித்து ஊக்கம் கொடுத்தால் மட்டுமே விழாவை சிறப்பாக நடத்த முடியும் என்பது திரையுலகினரின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்