ஆப்நகரம்

படத்திற்காக அதர்வா இப்படியெல்லாம் செய்வாரா?

நடிகர் அதர்வா அடுத்ததாக நடிக்க உள்ள பூமராங் படத்திற்காக 5 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுள்ளார்.

Samayam Tamil 29 Mar 2018, 8:17 pm
நடிகர் அதர்வா அடுத்ததாக நடிக்க உள்ள பூமராங் படத்திற்காக 5 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுள்ளார்.
Samayam Tamil பூமராங் படத்தில் அதர்வா
பூமராங் படத்தில் அதர்வா


நடிகர் முரளியின் மகன் அதர்வா, தற்போது இமைக்கா நொடிகள், செம போதை ஆகுதே, பூமராங் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் பூமராங் படத்தில் 3 வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், அதில் ஒரு கதாபாத்திரத்திற்காக 5 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து மேக்கப் போட்டுள்ளார். மும்பையில் இருந்து வந்த மேக்கப் கலைஞர்கள் அவரின் உருவத்தை அளவெடுக்க அந்த மேக்கப்பை போட்டுள்ளனர். இந்த மேக்கப் போடும்போது, அதர்வாவுக்கு மூச்சு விடுவதில் சிரமாக இருந்ததாக அப்படத்தின் இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

கமல், விக்ரம் உள்ளிட்டோர் படத்தின் வெற்றிக்காக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று, வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பது வழக்கம். அந்த வரிசையில் தற்போது அதர்வாவும் தனது முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்