ஆப்நகரம்

அடுக்கடுக்கா புகார் அளித்த மனைவி; போலீஸ் முன் ஆஜரான தாடி பாலாஜி!

மனைவி அளித்த புகாரை அடுத்து, போலீஸ் முன் நடிகர் தாடி பாலஜி ஆஜரானார்.

TNN 24 Oct 2017, 4:23 pm
சென்னை: மனைவி அளித்த புகாரை அடுத்து, போலீஸ் முன் நடிகர் தாடி பாலஜி ஆஜரானார்.
Samayam Tamil actor balaji appears before police investigation
அடுக்கடுக்கா புகார் அளித்த மனைவி; போலீஸ் முன் ஆஜரான தாடி பாலாஜி!


சின்னத்திரையில் பிரபல நடிகராக விளங்குபவர் தாடி பாலாஜி. இவருக்கும், மனைவி நித்யாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, நித்யா போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று பரபரப்பு புகாரை அளித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாடி பாலாஜி குடித்து விட்டு தன்னை அடிப்பதாக குற்றம்சாட்டினார். ஏற்கனவே தனக்கு திருமணம் ஆகியதை மறைத்துவிட்டார் என்று மனைவி புகார் தெரிவித்தார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது வழக்கறிஞருடன், தாடி பாலாஜி ஆஜரானார். அவரை போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் விசாரித்தார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்துள்ளது.

Actor Balaji appears before Police investigation.

அடுத்த செய்தி

டிரெண்டிங்