ஆப்நகரம்

4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மலையாளத்தில் களமிறங்கும் “பொட்டு” பரத்!

நடிகர் பரத், நான்காண்டுகளுக்குப் பின் தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 6 Mar 2019, 5:59 pm
நடிகர் பரத் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் வெளியான வேகத்தில் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். பின்னர் ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பில்லாமல் வில்லனாகவும் நடிக்கத் தொடங்கினார். இவர் சினிமாவில் நடிக்க வந்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாகி விட்டது. இன்னும அவரால் முன்னணி நடிகராக வர முடியவில்லை.
Samayam Tamil bharath


சமீபத்தில் தமிழில் அவரது நடிப்பில் வெளியான சிம்பா என்கிற படம் வந்த சுவடு தெரியாமல் தியேட்டரை விட்டு வெளியேறியது. இந்த நிலையில் அவர் நடித்துள்ள ஹாரர் திரில்லரான ‘பொட்டு’ என்கிற படம் மிக பிரமாண்டமாக ஆயிரம் தியேட்டர்களில் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் பரத், தற்போது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் மலையாளத்தில் ‘6 அவர்ஸ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை சுனிஷ் குமார் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில், பரத்துடன் அனுமோகன் மற்றும் இப்ராஹிம் என இன்னும் இரண்டு ஹீரோக்களும் நடிக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்