ஆப்நகரம்

நட்சத்திர விடுதியில் மதுபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா

நடிகா் பாபி சிம்ஹா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நண்பா்களுடன் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 16 Jul 2018, 5:05 am
நடிகா் பாபி சிம்ஹா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நண்பா்களுடன் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil Bobby Simha


ஜிகா்தண்டா படத்தில் எதிா்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்ததன் மூலம் பாபி சிம்ஹா ரசிகா்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தாா். அவா் ஞாயிற்றுக் கிழமை சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளாா்.

சென்னை ஈக்காட்டுத் தாங்களில் உள்ள நட்சத்திர விடுதியில் பாபி சிம்ஹாவும், அவரது நண்பா் கருணாவும் மது அருந்தி உள்ளனா். இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. மது போதையில் இருவரும் இது குறித்து விவாதித்துள்ளனா்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அது கைகலப்பாக மாறியுள்ளது. இருவரும், ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டுள்ளனா். இதனைத் தொடா்ந்து காவல் துறைக்கு தொிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், காவல் துறையினா் விடுதிக்கு வந்து பிரச்சினையில் ஈடுபட்ட இருவரையும் எச்சரித்து வழக்குப்பதிவு செய்யாமல் அனுப்பி உள்ளனா்.

தற்போது இப்பிரச்சினை இணையதளங்களில் விவசாதப் பொருளாக உள்ளனது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்