சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கின் மறைவு திரைத்துறையினர் மத்தியிலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஆறாத காயத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விவேக்கின் மேலாளரும் நடிகருமான செல்முருகனிற்கு, சின்ன கலைவாணரின் மறைவு மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில் செல்முருகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விவேக்கின் மறைவு குறித்து பகிர்ந்துள்ள பதிவு, காண்போரை கலங்க வைக்க செய்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டார். அதன் பிறகு அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. ரசிகர்களின் பிரார்த்தனை, மருத்துவர்களின் முயற்சி எதுவும் பயனளிக்காமல் கடந்த சனிக்கிழமை அதிகாலை காலமானார் நடிகர் விவேக்.
அவரின் திடீர் மறைவு ரசிகர்களுக்கும், திரைத்துரையினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பலரும் விவேக் உடனான தங்களின் நினைவலைகளை பற்றி பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் விவேக்கின் மேலாளரும், நடிகருமான செல்முருகன் தன்னுடைய வலைத்தள பக்கத்தில், மறைந்த நடிகர் விவேக்கின் இழப்பு குறித்து ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில், ஓர் மரணம் என்ன செய்யும் சிலர் புரொஃபைலில் கறுப்பு வைப்பார்கள் சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள் சிலர் RIPயுடன் கடந்த போவார்கள். சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள். சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள். ஆனால் அண்ணா... உண்மையான ஜீவன் என் உயிர் தோழன் என் முருகனை.. விட்டுவிட்டு கடவுள் முருகனை காண காற்றில் கரைந்து விட்டாயே! இங்கு எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள்! இனி என் முருகனுக்கு யார்? துணை விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்? இனி அவனுக்கு யார்? துணை.. யார்? துணை.... யார்? துணை...... இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு காண்போரை கலங்க வைத்துள்ளது. ரசிகர்கள் பலரும் செல்முருகனுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். விவேக்கின் இறுதி சடங்கில் கலங்கிய கண்களுடன் தாயை தொலைத்த பிள்ளையை செல்முருகன் காட்சியளித்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து, சிறந்த நட்பிற்கு அடையாளமாக கூறினார்கள். கடைசியாக அவர் நடிகர் விவேக்குடன் இணைந்து கொரோனோ தடுப்பூசி போட்டு கொண்டு ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். தன்னுடைய ட்விட்டர் புரொபைலிலும் விவேக்குடன் ஆரம்ப காலத்தில் எடுத்த பழைய புகைப்படத்தை வைத்துள்ளார் செல்முருகன்.
அவரின் திடீர் மறைவு ரசிகர்களுக்கும், திரைத்துரையினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. பலரும் விவேக் உடனான தங்களின் நினைவலைகளை பற்றி பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் விவேக்கின் மேலாளரும், நடிகருமான செல்முருகன் தன்னுடைய வலைத்தள பக்கத்தில், மறைந்த நடிகர் விவேக்கின் இழப்பு குறித்து ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில், ஓர் மரணம் என்ன செய்யும் சிலர் புரொஃபைலில் கறுப்பு வைப்பார்கள் சிலர் ஸ்டேட்டஸில் புகைப்படம் வைப்பார்கள் சிலர் RIPயுடன் கடந்த போவார்கள். சிலர் ஆழ்ந்த இரங்கலை தட்டச்சிடுவார்கள். சிலர் கண்ணீர் குறியீட்டுடன் கழன்று கொள்வார்கள். ஆனால் அண்ணா... உண்மையான ஜீவன் என் உயிர் தோழன் என் முருகனை.. விட்டுவிட்டு கடவுள் முருகனை காண காற்றில் கரைந்து விட்டாயே! இங்கு எல்லாருமே முருகன் தான் துணை என்பார்கள்! இனி என் முருகனுக்கு யார்? துணை விடையில்லாமல் விரக்தியில் கேட்கிறேன்? இனி அவனுக்கு யார்? துணை.. யார்? துணை.... யார்? துணை...... இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு காண்போரை கலங்க வைத்துள்ளது. ரசிகர்கள் பலரும் செல்முருகனுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர். விவேக்கின் இறுதி சடங்கில் கலங்கிய கண்களுடன் தாயை தொலைத்த பிள்ளையை செல்முருகன் காட்சியளித்த புகைப்படத்தை பலரும் பகிர்ந்து, சிறந்த நட்பிற்கு அடையாளமாக கூறினார்கள். கடைசியாக அவர் நடிகர் விவேக்குடன் இணைந்து கொரோனோ தடுப்பூசி போட்டு கொண்டு ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். தன்னுடைய ட்விட்டர் புரொபைலிலும் விவேக்குடன் ஆரம்ப காலத்தில் எடுத்த பழைய புகைப்படத்தை வைத்துள்ளார் செல்முருகன்.