ஆப்நகரம்

நாய், நரிக்கெல்லாம் சிலை இருக்கும்; எம் காவிய நாயகனுக்கு? சீறும் சேரன்...!

சிவாஜி சிலை அகற்றப்பட்ட சம்பவம் குறித்து, தனது கவிதையால் நடிகர் சேரன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

TNN 4 Aug 2017, 6:51 pm
சென்னை: சிவாஜி சிலை அகற்றப்பட்ட சம்பவம் குறித்து, தனது கவிதையால் நடிகர் சேரன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil actor cheran expresses his anger against sivaji statue removal
நாய், நரிக்கெல்லாம் சிலை இருக்கும்; எம் காவிய நாயகனுக்கு? சீறும் சேரன்...!


சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி சிலை, போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் என்று கூறி இரவோடு இரவாக அகற்றப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சேரன், தனது வருத்தத்தை கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

நாய்..நரிக்கெல்லாம்..
சிலை இருக்கும்..
இம் மண்ணில்..
எம் காவிய நாயகனுக்கு
சிலை இருக்கக் கூடாதா..?

கடற்கரை முழுக்க
ஊழல் கறைப் பட்டோர்
கல்லறைகளாய் கிடக்க..
இம் மண்ணின்
வைர மகனுக்கு
எம் மண்ணில்
சிலை இருக்கக்
கூடாதா..

சோபன்பாபுக்கு சிலை..
வீரம் பேசி கலை
வளர்த்த எம்
திரைத் திலகத்திற்கு
சிலை இருக்கக் கூடாதா..

காறித் துப்பக்கூட
வெறுப்பாக இருக்கிறது..
உள்ளுக்குள் சினமேறி
நெருப்பாக கொதிக்கிறது...

முன்னதாக சிவாஜி நினைவு தினத்தை முன்னிட்டு, சிறப்பு வீடியோ ஒன்றை தயாரித்துள்ளார். இந்தப் பாடலை உருவாக்க 4 மாதங்கள் ஆனதாக கூறியுள்ளார். ’நடிகர் திலகம் ஒரு நிகரில்லா வரலாறு’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.



Actor Cheran expresses his anger against Sivaji Statue removal.

அடுத்த செய்தி

டிரெண்டிங்