ஆப்நகரம்

தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக அறிமுகமாகும் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி!

பிரபல நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி, தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

Samayam Tamil 18 Feb 2019, 4:35 pm
‘சிதம்பர ரகசியம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அருண்பாண்டியன். அதையடுத்து ‘ஊமை விழிகள்’ படத்தில் நடித்தார். அதையடுத்து தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்தார். தமிழை அடுத்து இவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
Samayam Tamil arun-pandian


தற்போது இவர் ‘ஐங்கரன்’ என்ற தயாரிப்பு கம்பெனியை வைத்து பல படங்களை தயாரித்து வருகிறார். இவரது மகள் கீர்த்தி. இவரை தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. மேடை நாடகங்களில் கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். புதுமுகம் ஹரிஷ் ராம் இயக்கி வரும் படத்தில் கீர்த்தி நடிக்கிறார்

இது குறித்து கீர்த்தி அளித்த பேட்டியில், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக நான் அப்பாவுடன் இணைந்து தொழில் செய்து வந்தேன். சிங்கப்பூரில் உள்ள படங்களை விநியோகிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தேன். ஆனால் எனக்கு எப்பொழுதுமே நடிப்பு மீது தான் அதிக ஆர்வம். கடந்த 3 ஆண்டுகளாக மேடை நாடகங்களில் நடித்து வருகிறேன்.

முறையே நடிப்பை கற்ற பிறகே சினிமாவுக்கு வர வேண்டும் என்று நினைத்தேன். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்கள் என்பதால் ஒப்புக் கொள்ளவில்லை. தற்போது என்னுடைய கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்