ஆப்நகரம்

விஜய், தனுஷ் பட நடிகர் ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனாவுக்கு பலி

நடிகரும், ஊடகவியலாளருமான ஃப்ளோரன்ட் பெரேரா கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிர் இழந்தார்.

Samayam Tamil 15 Sep 2020, 10:46 am
விஜய்யின் புதிய கீதை படம் மூலம் நடிகர் ஆனவர் ஃப்ளோரனட் பெரேரா. அவர் கயல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு அவர் தொடரி, தரமணி, கொடிவீரன், வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
Samayam Tamil florent pereira


கலைஞர் டிவியின் ஜெனரல் மேனஜராக இருந்தவர் ஃப்ளோரன்ட் பெரேரா. அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஃப்ளோரன்ட் பெரேரா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 10 மணி அளவில் உயிர் இழந்தார். அவருக்கு வயது 67.

ப்ளோரன்ட் பெரேரா உயிரிழந்த செய்தி அறிந்த திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக பலரும் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஃப்ளோரன்ட் பெரேரா அண்மையில் தான் பாஜகவில் சேர்ந்தார். அவர் இறந்த செய்தி அறிந்த பாஜக மாநில தலைவர் எல். முருகன் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,

மூத்த ஊடகவியலாளரும், திரைப்பட நடிகருமான ஃப்ளோரன்ட் சி. பெரேரா காலமானார்!

ஓம் ஷாந்தி !! என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பிரச்சனையால் திரையுலகம் முடங்கியிருக்கிறது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பெரேராவின் மரண செய்தி அறிந்தவர்கள் இந்த 2020ம் ஆண்டு இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப் போகிறதோ என்று கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

சயீஷா குடும்பத்தில் கொரோனாவுக்கு 2 வாரத்தில் 2 பேர் பலி

அடுத்த செய்தி

டிரெண்டிங்