ஆப்நகரம்

ஐஸ்வர்யாவுடனான பிரிவிற்கு பின் தனுஷ் செய்துள்ள காரியம்: வைரலாகும் புகைப்படம்.!

நடிகர் தனுஷ் தனது மகன்கள் மற்றும் தந்தையுடன் கிரிக்கெட் விளையாண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 22 Jun 2022, 7:32 pm
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அண்மையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
Samayam Tamil Dhanush
Dhanush


விவாகரத்து அறிவிப்பிற்கு பின் தன்னுடைய கெரியர் சமப்ந்தமான வேளைகளில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஐஸ்வர்யா. அதே போல் தனுஷும் தனது அடுத்தடுத்த படங்களில் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் தமிழ், தெலுங்கு மொழியில் உருவாகும் வாத்தி படத்திலும் நடித்து வருகிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தனுஷ், ஐஸ்வர்யா பிரிவிற்கு பின், இது கணவன் - மனைவிக்குள் நிகழும் சாதாரண கருத்து வேறுபாடும், அதனால் ஏற்பட்ட தற்காலிக பிரிவு தான் என தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார். அவர்களை மீண்டும் இணைக்க இரு குடும்பத்தினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால் இதுவரை இவர்கள் இருவரும் இணைவதை போல் தெரியவில்லை.

ஐஸ்வர்யாவுடன் பிரிவிற்கு பின்னர் 'நானே வருவேன்' படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் தனது மகனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவியது. அதனை தொடர்ந்து இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு தனது மகன்கள் யாத்ரா, லிங்கா இருவரையும் அழைத்து சென்றார் தனுஷ்.

Vijay: வாரிசுக்கும் அஜித் படங்களுக்கும் உள்ள ஒற்றுமை.. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா..?

இந்நிலையில் தனது மகன்கள் யாத்ரா, லிங்கா தந்தை கஸ்தூரிராஜா மற்றும் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியிருக்கிறார் தனுஷ். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வரும் 'நானே வருவேன்' படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்