தளபதி
விஜய் தற்போது வம்சியின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது. இதையடுத்து விஜய் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வாரிசு படத்தில் நடிக்க இருக்கின்றார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு இக்கூட்டணி மீண்டும் இணையவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது
தனுஷ்
சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார். அதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படமும் ரசிகர்களின் ஆதரவை பெற்றது. இந்நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இதையடுத்து தனுஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் வாத்தி திரைப்படம் அடுத்தாண்டு திரையில் வெளியாகவுள்ளது
கைவிட்ட விஜய்
இன்று தளபதியாக பல வெற்றிகளை குவித்து வந்த விஜய்க்கு முதல் வெற்றி படத்தை கொடுத்தது சூப்பர் குட் பிலிம்ஸ் தான். பூவே உனக்காக படத்தின் மூலம் விஜய்யை வெற்றி நாயகனாக்கிய தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தொடர்ந்து விஜய்யின் பல படங்களை தயாரித்தார். லவ் டுடே, ஷாஜஹான், திருப்பாச்சி போன்ற பல வெற்றிப்படங்களை விஜய்க்கு கொடுத்துள்ளார் சௌத்ரி. இந்நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் நூறாவது திரைப்படத்தில் விஜய் நடிப்பார் என பேசப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் வந்த தகவலின் படி விஜய் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவில்லையாம். ஒரு சில காரணங்களால் விஜய் நடிக்கமுடியாது என்பது போல சொல்லிவிட்டாராம்
ஆர்வம் காட்டும் தனுஷ்
இந்நிலையில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் நூறாவது திரைப்படத்தில் விஜய் நடிக்காததை அடுத்து தனுஷ் நடிக்கயிருப்பதாக தகவல் வந்துள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற ஒரு பாரம்பரியமான தயாரிப்பு நிறுவனத்தின் நூறாவது திரைப்படத்தில் தனுஷ் நடிக்க மிகவும் ஆசைப்படுகின்றாராம். எனவே ஆர்.பி.சௌத்ரி அழைத்ததும் தனுஷ் எந்த வித மறுப்புமின்றி நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது