தனுஷின் 40ஆவது படமான, 'ஜகமே தந்திரம்' கடந்த வருடமே வெளிவந்திருக்க வேண்டிய படம். ஆனால், கொரானோ தொற்று காரணமாக வெளிவராமல் தள்ளிப் போய்விட்டது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட இப்படத்தில் பலர் நடித்துள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டது. ராஜஸ்தான், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் சில முக்கியக் காட்சிகளையும் படமாக்கியுள்ளது படக்குழு. இத்திரைப்படம் 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா அச்சுருத்தல் காரணமாக வெளியாகவில்லை.
கடந்த வருடமே, இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்ற செய்தி வெளியானது, இதற்கு படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் ட்விட்டரில், "தியேட்டர்கள் திறக்கப்படும் வரை பொறுமையாக இருக்கவும். வதந்திகளை நம்ப வேண்டாம் என விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தை ஓடிடியில் விற்பனை செய்ய தயாரிப்பாளர் பேச்சு வார்த்தையை முடித்து விட்டதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தனுஷின் எதிர்ப்பையும் மீறி தயாரிப்பாளர் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யாமல் ஓடிடியில் ரிலீஸ் செய்வதாக கூறப்பட்டு வந்தது. தயாரிப்பு தரப்பின் இந்த முடிவால் தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
'மாநாடு' புரமோஷனில் களமிறங்கிய பிரபலங்கள் : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மேலும் ரசிகர்களும் ஓடிடி வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், படத்தை ஓடிடியில் வெளியிடும் தினத்தன்றே தியேட்டர்களிலும் வெளியிடலாமா என தயாரிப்பாளர் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் தனுஷ் தன்னுடைய ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள், எனது ரசிகர்கள் போலவே,’ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன்.” இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டது. ராஜஸ்தான், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் சில முக்கியக் காட்சிகளையும் படமாக்கியுள்ளது படக்குழு. இத்திரைப்படம் 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா அச்சுருத்தல் காரணமாக வெளியாகவில்லை.
கடந்த வருடமே, இப்படம் ஓடிடியில் வெளியாகும் என்ற செய்தி வெளியானது, இதற்கு படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் ட்விட்டரில், "தியேட்டர்கள் திறக்கப்படும் வரை பொறுமையாக இருக்கவும். வதந்திகளை நம்ப வேண்டாம் என விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தை ஓடிடியில் விற்பனை செய்ய தயாரிப்பாளர் பேச்சு வார்த்தையை முடித்து விட்டதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தனுஷின் எதிர்ப்பையும் மீறி தயாரிப்பாளர் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யாமல் ஓடிடியில் ரிலீஸ் செய்வதாக கூறப்பட்டு வந்தது. தயாரிப்பு தரப்பின் இந்த முடிவால் தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
'மாநாடு' புரமோஷனில் களமிறங்கிய பிரபலங்கள் : கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
மேலும் ரசிகர்களும் ஓடிடி வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், படத்தை ஓடிடியில் வெளியிடும் தினத்தன்றே தியேட்டர்களிலும் வெளியிடலாமா என தயாரிப்பாளர் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் தனுஷ் தன்னுடைய ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள், எனது ரசிகர்கள் போலவே,’ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன்.” இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.