ஆப்நகரம்

நண்பன் சுராஜுக்காக கெஸ்ட் ரோலில் நடித்த திலீப்!

நண்பன் சுராஜுக்காக, அசோக் நாயர் இயக்கும் படத்தில் நடிக் திலீப் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

Samayam Tamil 21 Oct 2017, 3:34 pm
நண்பன் சுராஜுக்காக, அசோக் நாயர் இயக்கும் படத்தில் நடிக் திலீப் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.
Samayam Tamil actor dileep acted as a guest role for his friend suraj
நண்பன் சுராஜுக்காக கெஸ்ட் ரோலில் நடித்த திலீப்!


மலையாளத்தில் சிறந்த குணச்சித்திர நடிகருக்காக தேசிய விருது பெற்றவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தற்போது இவர் மலையாளத்தில் அதிக படங்களில் பிசியான காமெடியனாக நடித்து வருகிறார். அதிலும் காமெடி என்பதையும் தாண்டி குணச்சித்திர வேடங்களிலும் சில இயக்குனர்கள் இவரை நடிக்க வைத்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு பஹத் பாசிலுடன், சுராஜ் இணைந்து நடித்த ‘தொண்டிமுதலும் திருக்சாட்சியும்‘ படம் இவரது நடிப்புக்கு ஒரு நல்ல உதாரணம்.. அந்தவகையில் தற்போது ‘குட்டன் பிள்ளையுடே சிவராத்திரி’ மற்றும் சவாரி என இரண்டு படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சுராஜ் வெஞ்சாரமூடு.. இதில் சவாரி’ படத்தில் தேவஸ்தானத்தில் வேலைபார்க்கும் அலுவலராக நடித்துள்ளார் சுராஜ். இந்தப் படத்தை அசோக் நாயர் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் திலீப் நடித்துள்ளார். சுராஜிடம் தான் கொண்டுள்ள நட்புக்காகவே திலீப் இப்படி கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதித்தாராம்.

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் நடிகர் சுராஜ், ‘ரிங் மாஸ்டர்’, ‘லைப் ஆப் ஜோஸுட்டி’, ‘சந்திரேட்டன் எவிடயா’, ‘டூ கண்ட்ரீஸ்’ என நான்கு படங்களில் திலீப்புடன் இணைந்து காமெடியனாக நடித்துள்ளார். தமிழில் ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள ‘பேரன்பு’ படத்திலும் முக்கிய வேடத்தில் சுராஜ் நடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்